
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கார் பார்க்கிங் அமையும் இடத்தில் சர்வே நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பார்க்கிங் அமைக்க அனுமதிக் கோரி, கேரளாவும், எதிர்ப்புத் தெரிவித்து தமிழகமும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு, “கடந்த 1886- ஆம் ஆண்டு போடப்பட்ட பெரியார் ஒப்பந்தத்தின் படி, வழங்கப்பட்ட இடத்தில் தான் கார் பார்க்கிங் உள்ளதா? என சர்வே நடத்த வேண்டும். இந்திய சர்வே துறை (அல்லது) பரிந்துரைச் செய்யப்படும் அதிகாரிகள் சர்வே நடத்த வேண்டும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் சர்வே நடத்தி மூன்று மாதங்களுக்குள் அறிக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டுள்ளனர்.
நிதி நிறுவனம் நடத்தி ரூ.400 கோடி வரை மோசடி
கூட்டுக் கணக்கெடுப்புப் பணிகளை நடத்துவதே சரியானதாக இருக்கும் என ஏற்கனவே உச்சநீதிமன்றம் கூறியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


