spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த...

துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம், பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்

-

- Advertisement -

துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் ,பணம் கடத்தல்-கடத்தலில் ஈடுபட்ட விமான நிலைய ஒப்பந்த பெண் ஊழியர்கள் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்.

துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம் பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்

துபாயிலிருந்து விமானங்களில், சென்னைக்கு கடத்திக் கொண்டு வரப்பட்ட, ரூ.5 கோடி மதிப்புடைய, 7.2 கிலோ தங்கம்,ரூ.50 லட்சம் மதிப்புடைய இந்திய, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை, பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடியில் உள்ள விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் வீடுகளிலிருந்து பறிமுதல்.

we-r-hiring

டி ஆர் ஐ அதிகாரிகள், சென்னை விமான நிலையத்தில் தொடங்கி, பல்லாவரம், குரோம்பேட்டை, மன்னடி ஆகிய இடங்களில், சினிமா பாணியில் அதிரடியாக நடத்திய சோதனைகளில், இந்த தங்கம், பணத்தை பறிமுதல் செய்து, விமான நிலைய பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 3 ஊழியர்கள், புதுக்கோட்டையை சேர்ந்த கடத்தல் ஆசாமி, ஆகிய 4 பேரை கைது செய்து, மேலும் விசாரணை.

துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம் பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்

துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் விமானங்களில் சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்படுவதாகவும், அந்தத் தங்கத்தை சுங்கச் சோதனை இல்லாமல், விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சிலர் ரகசியமாக வெளியில் எடுத்து செல்வதாகவும், சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறையான, டி ஆர் ஐ க்கு, ஞாயிறு இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து டி ஆர் ஐ தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து, வெளியில் நின்று கொண்டு தீவிரமாக கண்காணித்தனர். அவர்கள் பயணிகளை கண்காணிப்பதை விட, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்களை அதிக அளவில் கண்காணித்து வந்தனர். அவர்களுடைய தீவிர கண்காணிப்பில், பெண் ஒப்பந்த ஊழியர்களும் தப்பவில்லை.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் பெண்களான சினேகா (30), சங்கீதா (28) ஆகிய 2 பெண் ஊழியர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. எனவே அவர்கள் இருவரையும் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது அந்த இரு பெண்களும் பணி முடிந்து, வீடுகளுக்கு சென்றனர்.

துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம் பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்

டி ஆர் ஐ அதிகாரிகள், ரகசியமாக பின் தொடர்ந்தனர். அதில் ஒரு பெண் வீடு பல்லாவரத்திலும், மற்றொரு பெண் வீடு குரோம்பேட்டையிலும் இருந்தன. அந்த இரு பெண்களும் தங்கள் வீடுகளுக்கு சென்ற, சிறிது நேரத்தில், டி ஆர் ஐ அதிகாரிகள், இரு குழுக்களாக பிரிந்து, இரு பெண்கள் வீடுகளிலும் திடீர் சோதனைகள் நடத்தினர்.

அப்போது வீடுகளில் உள்ள பாத்ரூம்கள், பீரோக்கள் போன்றவைகளில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்க உருளைகள், தங்கப் பசைகள் போன்றவைகளை கைப்பற்றினர். இருவர் வீடுகளிலும் இருந்து மொத்தம் 4.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து இரண்டு பெண்களிடமும் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணிகள், விமானங்களில் கடத்தி வரும், தங்கத்தை ரகசியமாக, இவர்கள் வாங்கி, தங்களுடைய உள்ளாடைகளுக்கு மறைத்து வைத்து, சுங்கச் சோதனை இல்லாமல், வீடுகளுக்கு கொண்டு வந்தது விடுவார்கள். அதன்பின்பு கடத்தல் கும்பலின், ஏஜெண்டுகள் வந்து, இவர்களிடம் இருந்து, தங்கத்தை வாங்கிச் செல்வார்கள் என்று தெரிந்தது.
அதன் பின்பு அதிகாரிகள் இரு பெண்களையும், தங்களது காவலில் வைத்துக் கொண்டு, தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

துபாயிலிருந்து சென்னைக்கு 5 கோடி மதிப்புள்ள தங்கம் பணம் கடத்தல் -கடத்தல் ஆசாமிகளை கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள்

இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலையில், இந்தப் பெண்களிடம் இருந்து தங்கத்தை வாங்கி செல்வதற்காக, கடத்தல் ஆசாமி ஒருவர் பெண்கள் வீடுகளுக்கு வந்தார். அவரை டி ஆர் ஐ அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

அந்த கடத்தல் ஆசாமியின் பெயர் முகமது ஹர்ஷத் (27). இவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர். சென்னை மண்ணடியில் உள்ள விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன் வீட்டில் தங்கியிருப்பது தெரிய வந்தது. இதை அடுத்து டி ஆர் ஐ அதிகாரிகள், இரு பெண்கள் உட்பட 3 பேரை அழைத்துக் கொண்டு, மண்ணடியில் கலையரசன் வீட்டிற்கு சென்று, சோதனை நடத்தினர்.

கலையரசன் வீட்டில் இருந்த 1.5 கிலோ தங்கம் மற்றும் இந்திய பணம் ரூ. 45 லட்சம், அமெரிக்க டாலர் கரன்சி ரூ. 5 லட்சம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அதோடு கலையரசனையும் (30) கைது செய்தனர். இந்த கலையரசன் தான், தங்கம் கடத்தும் அசாமிகளை, இந்த இரு பெண்களுக்கு, அறிமுகம் செய்து வைத்தவர் என்றும் தெரிய வந்தது.

இதை எடுத்து 2 பெண்கள் உட்பட 4 பேரையும் கைது செய்த டி ஆர் ஐ அதிகாரிகள், அவர்களை சென்னை தியாகராய நகரில் உள்ள, தங்கள் அலுவலகத்துக்கு கொண்டு சென்று, மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் சோதனையை தொடங்கிய டி ஆர் ஐ அதிகாரிகள், சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கை எடுத்து, பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தி, ரூ.4.5 கோடி மதிப்புடைய, 7.2 கிலோ தங்கம்,ரூ.50 லட்சம் மதிப்புடைய, வெளிநாடு மற்றும் இந்திய பணம், மொத்தம் ரூ.5 கோடி மதிப்புடைய தங்கம், பணத்தை பறிமுதல் செய்ததோடு, விமான நிலைய பெண் ஊழியர்கள் 2 பேர், விமான விமான நிலைய ஆண் ஊழியர் ஒருவர், பிரபல கடத்தல் ஆசாமி ஒருவர் ஆகிய 4 பேரை, சங்கிலித் தொடர்போல் கைது செய்து, அதிரடி செய்துள்ளனர்.

டி ஆர் ஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்ட 4 பேர் இடமும், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கடத்தலில் வேறு யாருக்காவது சம்பந்தம் உண்டா? இவர்கள் இதை போல் எவ்வளவு தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் இதை போல் கடத்தல் ஆசாமிகளுக்கு துணை போகும் விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள், அதிலும் பெண் ஊழியர்கள், கைது செய்யப்படுவது, சென்னை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ