சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகள் குறித்த ஆய்வை மத்தியக் குழு தொடங்கியுள்ளது.
மாவீரனில் வாய்ஸ் ஓவர் கொடுத்தது விஜய் சேதுபதி…. அப்போ அயலான் பட ஏலியனுக்கு???
‘மிக்ஜாம்’ புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த சூழலில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் குணால் சத்யார்த்தி தலைமையில் ஆறு பேர் கொண்ட மத்தியக் குழு சென்னை வந்திருக்கிறது. தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உடன் ஆலோசித்த மத்திய குழு, இரண்டு குழுக்களாகக் பிரிந்து வேளச்சேரி, பட்டாளம் ஆகிய பகுதிகளில் பாதிப்பைப் பார்வையிட்டனர்.
அவர்களுக்கு தமிழக அரசு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இன்றும், நாளையும் ஆய்வுச் செய்யும் மத்தியக் குழு அதிகாரிகள், பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். அப்போது, வெள்ள நிவாரணமாக 5,600 கோடி ரூபாய் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு தரப்பில் வலியுறுத்தப்படவுள்ளது.
இதனையடுத்து, டெல்லி புறப்பட்டு செல்லும் மத்தியக் குழு ஒருவார காலத்திற்குள் வெள்ளச் சேதம் குறித்த ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடிய ரஜினி… வைரலாகும் புகைப்படங்கள்!
முன்னதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், கடந்த டிசம்பர் 07- ஆம் தேதி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு 450 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்தது.