spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகுரூப்- 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.!

குரூப்- 4 தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி.!

-

- Advertisement -

 

குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Photo: TNPSC

குரூப்- 4 தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.

we-r-hiring

விஜய்யின் GOAT படத்தைக் கண்டு கொள்ளாத நெட்ஃபிளிக்ஸ்!

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வி.ஏ.ஓ., இளநிலை உதவியாளர் உட்பட 6,244 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்- 4 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வரும் ஜூன் 09- ஆம் தேதி காலை 09.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை குரூப்- 4 தேர்வு நடைபெறும். குரூப்- 4 தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 28- ஆம் தேதி கடைசி நாளாகும்.

குரூப்- 4 தேர்வுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைத் திருத்துவதற்கு வரும் மார்ச் 04- ஆம் தேதி முதல் மார்ச் 06- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

தள்ளிப் போகும் ‘இந்தியன் 2’ ரிலீஸ்….. காரணம் என்ன?

இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று அறிந்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ