- Advertisement -
ஆவடியில் பெண் தலைமை காவலர் விரைவு இரயிலில் அடிப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.


ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் ஸ்ரீபிரியா(41). இவர் சென்னை செந்தாமஸ் மவுண்டில் உள்ள காவல்துறை விஜலன்ஸ் பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் இன்று ஜோலர் பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை செல்லும் விரைவு இரயிலில் அடிப்பட்டு ஸ்ரீபிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.


