ஜென்டில்மேன், இந்தியன், முதல்வன் உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்து பிரம்மாண்ட இயக்குனராக உருவெடுத்தவர் இயக்குனர் சங்கர். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் THE ROBOT திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். நடிகர் ரஜினியை இந்த படத்தில் ரோபோ சிட்டியாக முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தில் காண முடிந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் படம் என்ற சாதனையை படைத்தது. அதே சமயம் பல்வேறு சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது எந்திரன். இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் ரஜினிக்கு பதிலாக கமல் நடிக்க இருந்ததாக பல தகவல்கள் வெளியானது. தற்போது கமல், ரஜினிக்கு முன்பாக இயக்குனர் சங்கர் வேறொரு நடிகரை தான் எந்திரன் படத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டாராம்.
அது வேறு யாருமில்லை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான். முதலில் இயக்குனர் சங்கர், ஷாருக்கான் மற்றும் பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அதன் பின் ஒரு சில காரணங்களால் ஷாருக்கான் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போக நடிகர் கமல்ஹாசனை கமிட் செய்தாராம். நடிகர் கமலும் நடிக்க முடியாமல் போக ரஜினியும் ஐஸ்வர்யா ராயும் ஒப்பந்தம் செய்யப்பட்டனராம்.
எந்திரன் பட ஸ்டைலில் கடந்த 2011ல் ஷாருக்கான் நடிப்பில் ரா.வன் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.