
தெற்கு ரயில்வேயின் பராமரிப்புப் பணிக் காரணமாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில், 150 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி மின்வாகன உற்பத்தி ஆலைக்கு முதலமைச்சர் அடிக்கல்!
தாம்பரம் முதல் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் மாநகர பேருந்துகளை விட 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பராமரிப்புப் பணி காரணமாக, 44 மின்சார ரயில் சேவைகள் இன்று (பிப்.25) இயக்கப்படாததால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலை 10.00 மணி முதல் மாலை 03.15 மணி வரை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களில் 42% பேர் தமிழகத்தில் உள்ளனர் – அமைச்சர் உதயநிதி பேச்சு
பிராட்வேயில் இருந்து அண்ணாசாலை வழியாக தாம்பரத்திற்கு 60 பேருந்துகளும், பிராட்வேயில் இருந்து தியாகராயர் நகர் மற்றும் எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு 20 பேருந்துகளும், கிண்டியில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு 10 பேருந்துகளும் இயக்கப்படுகிறது. அதேபோல், கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரத்திற்கு 30 பேருந்துகளும், பிராட்வே மற்றும் தியாகராயர் நகரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 30 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.