
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆதாயத்திற்காக சிஎஏ சட்டத்தை பாஜக அரசு அமல்படுத்தியுள்ளது – ஈபிஎஸ் கண்டனம்!
தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்று முடிவு செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேரில் சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஒப்பந்தம் இறுதியானது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமி நியமனம்!
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “மதுரை, திண்டுக்கல் தொகுதிகள் எங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கோவையை நாங்கள் விட்டுக்கொடுத்தோம்; திண்டுக்கல் தொகுதியை தி.மு.க. விட்டுக் கொடுத்தது” எனத் தெரிவித்தார்.
கடந்த முறை மதுரை, கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் போட்டியிட்ட நிலையில், இந்த முறை கோவைக்கு பதில் திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.