- Advertisement -
இயக்குநர் அட்லீ மற்றும் லோகேஷ் கனகராஜை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமாரும் புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்கி உள்ளது.

தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நெல்சன் திலீப்குமார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்திருந்தார். கோலமாவு கோகிலா படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி இருந்தார். இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. வசூலையும் வாரிக்குவித்தது. டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். ஆனால், பீஸ்ட் கலவையான விமர்சனம் பெற்றது.


அண்மையில் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் ரஜினிகாந்த், வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் நடித்திருந்தனர். படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.



