நடிகர் ரஜினி ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது 170வது படமான வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை 2024 அக்டோபர் மாதத்தில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து ரஜினிகாந்த் , லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார். அதன்படி ரஜினியின் 171 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கு கூலி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு டீசர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலாநிதிமாறன் தயாரிக்க அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். இந்த படம் சம்பந்தமான அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதன் காரணமாகவே படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து சாண்டி மாஸ்டர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகார்ஜுனா உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாக தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி ரஜினியின் வேட்டையன் திரைப்படம் மே மாதத்தின் மூன்றாவது வாரத்திற்குள் முடிவடைந்து விடும் எனவும் அதைத்தொடர்ந்து ஜூன் மாதத்தில் கூலி படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்த படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -


