spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாமது குடிப்பதற்காக 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்

மது குடிப்பதற்காக 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்

-

- Advertisement -

கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

மது குடிப்பதற்காக 4 மாத பெண் குழந்தையை ரூ.100-க்கு விற்ற கொடூர தாய்

we-r-hiring

அவர் சாலையோரம் மற்றும் பொது இடங்களில் தங்கி வந்துள்ளதாக தெரியவருகிறது. அவருக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னதாக ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தையை மடியில் கட்டிக்கொண்டு அவர் பிச்சை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், சாலையில் சுற்றித்திரிந்த இப்பெண்ணின் குழந்தை ஒன்றை விலைக்கு வாங்கி உள்ளார். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு தெரியவந்தது. உடனே அவர்கள் அந்த பெண்ணை சந்தித்து விசாரித்துள்ளனர் .

பின்னர் விலை கொடுத்து வாங்கப்பட்ட குழந்தையை மீட்டு கொப்பல் மாவட்ட குழந்தைகள் மேம்பாட்டு துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சாலையில் சுற்றிய பெண்ணுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது.

இந்த நிலையில் மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் 4 மாத பெண் குழந்தையை அதேப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.100-க்கு விற்பனை செய்தது தெரியவந்தது.குடிக்க பணம் தேவை படும் போதெல்லாம் இவ்வாறு குழந்தைளை விற்கும் செயல்களில் ஈடுபட்டிருக்களாம் என சந்தேகங்கள் எழுந்துள்ளது.

மேலும் இவர் சிறிது  மனநலம் சரியில்லாதவராக இருந்துள்ளார் மற்றும் அந்த பெண் எந்த ஊரை சேர்ந்தவர் என்பதும் தெரியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதையடுத்து குழந்தையின் தாயை அதிகாரிகள் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

MUST READ