HomeBreaking Newsவங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடக்கிறது!

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடக்கிறது!

-

- Advertisement -

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய கூடும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேற்கு வங்கம் மற்றும் அதனை ஒட்டிய வங்கதேச கடற்கரை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது.

நேற்று முன்தினம் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுவடைய கூடும். இன்று பிற்பகலில் மேற்கு வங்கம் – வங்கதேச கடற்கரை பகுதிகளில் சாகர் தீவுகள் மற்றும் கேப்புபாராவிற்கு இடையே கரையை கடக்க கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பிரபல நடிகர் மரணம்…. சோகத்தில் திரையுலகம்!

MUST READ