Homeசெய்திகள்காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் - பலி

காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் – பலி

-

- Advertisement -

குஜராத்தில்4 குழந்தைகள் விளையாடும்போது காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குட்பட்ட பலி.

காருக்குள் சிக்கிய 4 குழந்தைகள் - பலி

குஜராத்தின் அம்ரோலி மாவட்டத்தில் காருக்குள் சிக்கியதால் மூச்சு திணறி 7 வயதிற்குபட்ட 4 குழந்தைகள் உயிரிழந்தனர். பண்ணையில் வேலை செய்யும் பெற்றோர்கள், சம்பவத்தன்று சனிக்கிழமை என்பதால்  தங்களது 4 குழந்தைகளை வீட்டிலேயே விட்டுவிட்டு வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த பண்ணை உரிமையாளரின் காரில் அமர்ந்து விளையாடிய 4 குழந்தைகள், தவறுதலாக காரின் கதவை பூட்டியதாக கூறப்படுகிறது. உள்ளே மூச்சுவிட முடியாமல் தினறிய குழந்தைகள்  காரின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வர முயற்ச்சித்துள்ளனா் ஆனால் கதவை திறக்கத் தெரியாமல் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். . பணி முடிந்து வந்த பெற்றோர்கள் காரில் குழந்தைகள் சடலமாக இருப்பதை கண்ட பெற்றோா் அதிா்ச்சி அடைந்தனா் ,இச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெவிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சிராக் தேசாய்  சம்பவம் குறித்து விசாரனை மேற்கொண்டுள்ளா்.

இந்தியாவிற்கு சிறந்தவர் டொனால்ட் டிரம்பா? கமலா ஹாரிஸா?: ஜெய்சங்கர் சொன்ன பதில்

 

 

MUST READ