Homeசெய்திகள்கட்டுரைஅமித்ஷா முருகன் அரசியல்! நீங்கள் இந்துக்களின் பாதுகாவலரா? எஸ்.பி.லட்சுமணன் ஆவேசம்!

அமித்ஷா முருகன் அரசியல்! நீங்கள் இந்துக்களின் பாதுகாவலரா? எஸ்.பி.லட்சுமணன் ஆவேசம்!

-

- Advertisement -

பாஜக நடத்திய வேல் யாத்திரையால் அந்த கட்சிக்கு எந்த பலனும் ஏற்படவில்லை என்றும், அதேபோல் முருகர் மாநாட்டால் அவர்களுக்கு ஒருத்தர் கூட வாக்களிக்க மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் முருகர் மாநாடு குறித்தும், அதை முன்வைத்து பாஜகவினர் மேற்கொள்ளும் அரசியல் குறித்தும் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் போன்ற அதிமுக பலம் வாய்ந்த தொகுதிகளில் தோல்வியை தழுவியது. அதிமுகவின் வாக்குகள் பெரிய அளவுக்கு பாஜகவுக்கு விழுந்தது. அது தனித்த பாஜகவுக்கு விழுந்த வாக்குகள் அல்ல.  அதற்கு ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் தான் காரணம். மதுரையில் எதனால் அதிமுக இரண்டாவது இடத்திற்கு வந்தது. அங்கு டிடிவி தினகரனுக்கு என்று தனித்த செல்வாக்கு உள்ளது. மேலூர் சட்டமன்றத் தொகுதியில் தினகரன் கட்சிக்கு இருக்கின்ற செல்வாக்கு அனைவருக்கும் தெரியும். மதுரையை மையப்படுத்திய தென் மாவட்டங்களில் நெல்லை வரை தினகரனுக்கு இருக்கிற செல்வாக்கை, அவரை பிடிக்காதவர்கள் கூட ஒப்புக்கொள்வார்கள். ஓபிஎஸ்-ம் மிகப்பெரிய பண பலத்தை பயன்படுத்தினார். தனது செல்வாக்கை காண்பித்தார். உட்கட்சி விவகாரங்கள் இருந்தபோதும், பொதுமக்கள் மத்தியில் அவருக்கு எந்த கெட்டப்பெயரும் இலை. அதனால் 3 லட்சம் வாக்குகளை வாங்கினார். அதிமுகவை விட 3 மடங்குகளை வாங்கினார். எனவே அதிமுகவின் வாக்குகளை எடுத்தது ஓபிஎஸ், தினகரன். அவர்களால் பாஜகவும் வாக்குகளை எடுத்தது. ஆனாலும் தமிழகத்தில் பாஜக வளர்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

Amit Shah eps ops
Amit Shah eps ops

கடந்த 2 தேர்தல்களாக முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் பாஜகவுக்கு சென்று கொண்டிருக்கிறது. தற்போது பாஜக தலைவராக நயினார் வந்துள்ளபோது, முக்குலத்தோர் வாக்குகள் இன்னும் அதிகளவில் பாஜகவுக்கு செல்லும். இதை அதிமுக தான் உணர வேண்டும். இதை சொல்வதற்காக தான் முன்னாள் அமைச்சர்கள் 6 பேர் எடப்பாடி பழனிசாமியை போய் சந்தித்தார்கள். நாடாளுமன்றத் தேர்தலின்போது தினகரனும், ஓபிஎஸ்-ம் துரோகிகள் என்று குற்றம்சாட்டினார்கள். அவர்கள் பாஜகவுடன் சேர்ந்து துரோகம் செய்தார்கள் என்றனர். அப்போது நீங்கள் செய்வதற்கு பேர் என்ன? அவர்கள் பின்னால் யாரும் இல்லை என்றார்கள். ஆனால் ஓபிஎஸ், தினகரன் போட்டியிட்ட இடங்களில் அதிமுகவால் டெபாசிட் கூட வாங்க முடியவில்லை என்று நிருபித்தார்கள். இந்த எதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் என்று தான் அவர்கள் 6 பேரும் எடப்பாடியிடம் போய் சொன்னார்கள். இந்த நிமிடம் வரை எடப்பாடி அதுகுறித்து யோசிக்கவே இல்லை. பண பலம் இருக்கிறது நாம் ஜெயித்துவிடுவோம் என்று அவர் நினைக்கிறார். அதைவிட பல மடங்கு நம்மிடம் பணம் உள்ளது என்று திமுகவும் வெற்றி பெற்றுவிடுவோம் என்று நினைக்கிறார்கள்.

இந்து முன்னணி நடத்துகிற முருகர் மாநாட்டிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். பாஜகவின் அரசியலே மதத்தை மையப்படுத்தியதுதான். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டை பொறுத்தவரை அது எடுபடாது. எடுபடக்கூடாது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மத நம்பிக்கைகளுக்கும், மத நம்பிக்கைகள் தொடர்பான நிகழ்வுகளுக்கும், அரசியலுக்கும் தொடர்பு என்பது கிடையாது. பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தினார்களே, அதன் முடிவு என்ன ஆனது. ஆறுபடை வீடுகளில் ஒரு இடத்தில் கூட அவர்கள் வெற்றிபெற வில்லை. திருப்பரங்குன்றத்தில் அதிமுக வெற்றி பெற்றது ஏன் என்று உலகத்திற்கே தெரியும். ராஜன்செல்லப்பா, எத்தனை செல்வாக்கு மிக்கவர். பாஜகவின் வேல் யாத்திரையால், அதிமுகவுக்கு ஏதாவது ஒரு பயன் உண்டா? முருகன் மாநாடு நடத்தினால் எப்படி பாஜக வரும்? வளராது. வளரவும் கூடாது என்கிற உணர்வு முதலில் திமுகவுக்கு வர வேண்டும். நீங்களே பதற்றப்பட்டதால், மக்களுக்கு தவறான தகவலை சொல்கிறீர்கள் என்று அர்த்தமாகும். பாஜக சொல்வதால் ஒருத்தரும் வாக்களிக்க மாட்டார்கள். மத அரசியல் தமிழ்நாட்டிற்குள் வரக்கூடாது என்று நினைத்தால் திமுக தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இந்துக்களின் உணர்வுகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

அதிமுகவின் கட்டமைப்பை அழித்துதான் பாஜக வளர்ந்துகொண்டிருக்கிறது. அரசியல் ரீதியான தெளிவு எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது. அப்படி பட்ட நபரின் கையில் அந்த கட்சியின் தலைமை போனது துரதிர்ஷ்டவசமானது ஆகும். அதிமுக – பாஜக கூட்டணி அமைந்த விதத்தில் ஒரு அதிமுக தொண்டனுக்கும் மகிழ்ச்சி இல்லை. எடப்பாடி வேண்டுமானால் எதையோ காப்பாற்றி விட்டோம் என்று திருப்திபட்டுக் கொள்ளலாம். ஆனால் அதிமுக தொண்டர்களிடம் கேட்டுப்பாருங்கள் இந்த கூட்டணியால் சந்தோஷமா? என்று. இன்னும் அவர்களுக்கு சந்தோஷம் போய் சேரவில்லை. விமர்சனத்தை எடப்பாடி மீது வைக்க வேண்டுமே தவிர, அதிமுக என்கிற கட்சியின்  மீது வைத்து பயனில்லை.

MUST READ