Homeசெய்திகள்கட்டுரைதமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...

தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக…

-

- Advertisement -

பொன்னேரி 
G.பாலகிருஷ்ணன்

அதிமுக, இது இன்று தமிழக அளவில்  கிட்டத்தட்ட  2 கோடி உறுப்பினர்களையும், ஏறக்குறைய தற்போது  31%  வாக்கு வங்கியையும் வைத்திருக்க இருக்க கூடிய ஒரு மாபெரும்  கட்சியாக இருந்து வருகிறது. தமிழகத்தில் புரட்சி நடிகராக இருந்து புரட்சித் தலைவராக அவதாரம் எடுத்த எம்.ஜி.ஆர் இந்த கட்சியை மிக எளிமையாக துவக்கி, மிக வலிமையாக கட்டமைத்தார். இந்த கட்சியின் சின்னமான இரட்டை இலையை கூட மிகவும் பெரிய அளவில் திட்டமிட்டு உருவாக்காமல் அதிமுக உருவாக்கப்பட்டு முதன் முதலில் சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மிகவும் சாதாரண தொண்டராக இருந்த மாயதேவர் அவர்கள் விருப்பப்படியே அந்த தேர்தலில் ஏதேனும் ஒரு சுயேச்சை  சின்னத்தை தேர்ந்தெடுத்து கொள்ளுமாறு எம்.ஜி.ஆர் அறிவுரை வழங்கினார். ஒரு சாதாரண தொண்டர் தேர்வு செய்யப்பட்ட ஒரு  சின்னம் தான் இரட்டை இலை, எம்.ஜி.ஆர் பின்னர் அதையே தனது கட்சியின் சின்னமாகவும் அறிவித்தார்.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...அப்படிப்பட்ட அந்த சின்னம் இன்று வரை பல கட்டங்களில் பல பெரிய, பெரிய தடைகளை மீறி வெற்றி சின்னமாக இருந்து வருகிறது. அதிமுக கட்சியின் பெரிய அடையாளமாக இருந்த  எம்.ஜி.ஆருக்கு பிறகு, அந்த கட்சியின் நிரந்தரமான ஒரு அடையாளமாக இருக்க கூடியது  அந்த கட்சியின் இரட்டை இலை சின்னம் தான். எம்.ஜி.ஆர் தனக்கு பிறகு, இந்த கட்சியின் தலைமையை தேர்வு செய்யும் பொறுப்பை அந்த கட்சியின் தொண்டர்கள் இடமே விட்டு சென்றார். அந்த கட்சியின் தொண்டர்கள் எம்.ஜி.ஆரை மனதிலும், இரட்டை இலையை கையிலும் வைத்து கொண்டு அந்த கட்சியின் தலைமையை உருவாக்கியும், கட்சியை காப்பாற்றியும் வருகிறார்கள்.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...எம்.ஜி.ஆரால் எளிய முறையில் உருவாக்கி, ஆரம்பத்தில் இருந்து எம்.ஜி.ஆர் காலம் வரை அந்த கட்சியின் வாக்கு வங்கி 30% லிருந்து 37% வரை இருந்தது. ஆனால், எம்.ஜி.ஆருக்கு பிறகு கட்சியை தலைமையேற்று வழி நடத்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அந்த கட்சியின் வாக்கு வங்கியை 44% வரை உயர்த்தினார். இப்படி வலிமையாக கட்டமைக்கப்பட்ட அதிமுக பெரிய அளவில் தொண்டர் பலத்தையும், பெரிய அளவில் வாக்கு வங்கியையும் வைத்திருந்தாலும், இன்றைய சூழ்நிலையில் அந்த கட்சியின் வாக்கு வங்கி 31% சதவிகிதத்தில் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தலைமையின் தடுமாற்றத்தாலும், சுயநலத்தாலும் அதிமுக பெரிய சரிவு பாதையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது என்பது தான் உண்மை.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில், 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி மிகப்பெரிய ஒரு கண்டத்தை எதிர்நோக்கி உள்ளது என்ற சூழலை அந்த கட்சியில் தலைமையில் உள்ள கட்சி நிர்வாகிகளில் இருந்து கடைநிலையில் உள்ள தொண்டர் வரை உணர்ந்து தான் இருக்கிறார்கள். சொல்ல போனால் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கே பாஜகவுடன் கூட்டு சேர விருப்பமில்லை. இந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுக மிகப்பெரிய சரிவை சந்திக்கும் என்பது நன்றாக தெரியும், என்றாலும் அந்த கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகளை வைத்து தான், பாஜகவின் சூழ்ச்சி வலையில் அதிமுக சிக்கி தவிக்கின்றது என்பதை நாம் உணர முடிகிறது.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைப்பதால்  அந்த கட்சிக்கு சரிவு மட்டும் அல்ல அழிவு கூட ஏற்படலாம் என்பது தான் உண்மை. ஏனென்றால், இதே சூழ்நிலை தான் கடந்த 15 ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பல பெரிய, பெரிய கட்சிகளை எல்லாம் அழித்து, ஒழித்து  கட்சிகளை உடைத்து பிளவுபடுத்தி அந்த கட்சிகளின் எம்எல்ஏக்களையும் விலை கொடுத்து வாங்கி பல மாநிலங்களில் ஆட்சிகளை கவிழ்த்து, முதல்வர் வேட்பாளர்களே தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு நிலைமையை உருவாக்கி கிட்டத்தட்ட ஒரு அரக்கன் உருவத்தில் இன்று இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்து நிற்கக் கூடிய ஒரு கட்சி தான் பாஜக.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...இப்படி அதிரடியாக அரக்க புத்தியுடன் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் பாஜகவின் குறுக்கு புத்தி  செயல்பாடுகளும் இந்திய அளவில் தமிழ்நாட்டில் மட்டும் எடுபடவில்லை என்பதுதான் பாஜகவின் மிகப்பெரிய கோபமே, தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி அமைக்க எந்த கட்சியை வேண்டுமானாலும் பலி கொடுக்கலாம், எந்த எல்லைக்கும் போய் குறுக்கு புத்தியுடன் செயல்படலாம் என்று ஆணவத்துடன் சிபிஐ  மற்றும் அமுலாக்கதுறையுடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...ஆனால், இப்படி இந்தியா முழுவதிலும் கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கும் பாஜகவை தமிழ்நாட்டில் மட்டும் நேற்று கட்சி ஆரம்பித்த நடிகர் விஜய் கூட மதிக்கவில்லை.

அது மட்டும் இல்லாமல், திராவிடத்தை எதிர்க்கிறேன் என்ற பெயரில், பாஜகவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் சீமான் கூட பாஜகவுடன் நேரடியாக கூட்டணி சேர பயப்படுகிறார். அதற்கு காரணம் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவை சிறிதளவு கூட ஏற்று கொள்ளமாட்டார்கள் என்பதை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சியினரும்  புரிந்து வைத்திருப்பது தான், தமிழ்நாட்டில் பலமாக இருக்க கூடிய இரண்டு திராவிட கட்சிகளான  திமுக அல்லது அதிமுகவை அழித்து ஒழித்தால் தான் இங்கு பாஜக காலூன்ற முடியும் என்பதை புரிந்து கொண்டு தான், அந்த இரண்டு திராவிட கட்சிகளை அழித்து ஒழிக்க பாஜக திட்டம் தீட்டி செயல்பட்டு கொண்டிருக்கிறது.

பாஜக ஒவ்வொரு மாநிலத்திலும் ஆளும் கட்சிகளை பிளவுபடுத்தி அழித்து, ஒழித்து தன்னை வலிமைப்படுத்தி கொள்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், டெல்லியில்  ஆட்சியை கவிழ்க்க பாஜக திட்டமிட்டு இருப்பதாகவும், ஆம் ஆத்மியின் 40 எம்.எல்.ஏ.க்களை குறிவைத்து, அதற்காக ஒரு எம்.எல்.ஏவுக்கு ரூ.20 கோடி முதல் 40 கோடி வரை  கோடி வரை அலைபேசி வாங்க  பா.ஜ.க. தயாராக இருப்பதாகவும்,

பல மாநில அரசுகளை கவிழ்க்க பாஜக ஆப்ரேஷன் தாமரை என்ற ஒரு திட்டத்தை துவக்கி செயல்படுத்தி கொண்டிருக்கிறது எனவும், அது தற்போது, டெல்லியில் அதன் வேலைகளை காட்டுகின்றது என்றும், பல மாநிலங்களில் ஆட்சியை கவிழ்க்க  பாஜக 277 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கியுள்ளது என்றும் “டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெர்ஜ்ரிவால் டெல்லி சட்டமன்ற  தேர்தலின் போது பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...மேலும், எங்கள் மீது அமலாக்கத்துறை, சிபிஐ ஆகியவைகளை ஏவி விடப்படுகிறது. ஜி.எஸ்.டி மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வின் மூலம் கிடைத்த பணத்தை எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க பாஜக பயன்படுத்துகிறது.  மணிப்பூர், கோவா, மத்திய பிரதேசம், பீகார், அருணாசல பிரதேசம், மகாராஷ்டிராவில் ஆட்சியை கவிழ்த்த பாஜக தற்போது டெல்லி அரசை கவிழ்க்க சுயநலத்துடன் முயற்சிக்கிறது” என்றும் குற்றம் சாட்டினார்.

இவருடைய குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் வகையில் பாஜக பல மாநிலங்களில் தங்கள் சதுரங்க வேட்டையை நடத்தியதை நினைவுபடுத்தி பார்த்தால் தெரியவரும். 2014-ல் 60 சட்டமன்ற தொகுதி உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் 42 தொகுதியை வென்று ஆட்சியை பிடித்தது. நபம் துகிக் என்பவர் முதல்வராக பொறுப்பேற்றார்.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...ஆனால் வெறும் 11 எம்.எல்.ஏக்களை வைத்திருந்த பாஜக 21 காங்கிரஸ் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி கலிகோ புல் என்பவர் தலைமையில் அவர்களை செயல்பட வைத்து, பாஜகவின் 11 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் போட்டி சட்டசபை கூட்டத்தை துவக்கி, கலிகோ புல்லை முதல்வராக தேர்வு  செய்தனர்.

அப்போது, காங்கிரஸ் முதல்வராக இருந்த நபம் துகிக்கும் கவர்னர் ஜோதி பிரசாத் ராஜகோபாலுக்கும் தகராறு ஏற்பட்டு அதன் விளைவாக அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினர். இந்த நிலையில் நபம் துகி உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் நீதிபதி ஆளுநரை கண்டித்ததுடன் ஆட்சி கவிழ்ப்பு செய்தது செல்லாது என உத்தரவிட்டார். அதன் பின்னர் நபம் துகி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றார். அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்ததை நினைத்து மனம் வருந்திய கலிகோ புல் தற்கொலை செய்து கொண்டார்.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...அதன் பிறகும், பாஜகவின் கொடூர புத்தி மாறாமல் காங்கிரஸின் நீண்ட போராட்டத்துக்கு பிறகு, காங்கிரஸ், மீண்டும்  முதல்வரான  நபம் துகியை மாற்றி, பீமா காண்ட் என்பவரை புதிய முதல்வராக பொறுப்பேற்க செய்தது. குறுகிய காலத்திலேயே பீமா காண்டையும் விலைக்கு வாங்கிவிட்டது பாஜக. அவர் 40 எம்எல்ஏக்களுடன் காங்கிரஸில் இருந்து விலகி அருணாசல் மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியில் இணைந்தார்.  பாஜகவின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். பின்னர் தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் அந்த கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்து பாஜக கட்சியின் முதல்வராக அருணாச்சல பிரதேசத்தில் இருந்து வருகிறார்.

பீகார் சட்டமன்ற தேர்தலில், 80 இடங்களில் வென்ற லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், 71 இடங்களில் வென்ற நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. நிதிஷ் குமார் முதல்வராகவும், லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர்.   இரண்டு ஆண்டில் அந்த கூட்டணியை உடைத்த பாஜக நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. நிதிஷ் குமார் முதல்வரானார். பா.ஜ.க-வின் சுஷில் குமார் துணை முதல்வராகப் பொறுப்பேற்றார்.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க.  104 இடங்களில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் பாஜக ஆட்சி அமைக்கவில்லை.

அதனால், 78 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியும், 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தன. மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றார். ஆனால், ஆட்சி அமைத்த ஓரே ஆண்டில் அந்த கூட்டணி அரசை கவிழ்த்தது பா.ஜ.க. பின்னர்,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 13 எம்.எல்.ஏ கள் மற்றும் ம.ஜ.த கட்சியை சேர்ந்த 3 எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கி   தன் பக்கம் இழுத்து கொண்டது. பிறகு அந்த 16 எம்.எல்.ஏ-க்களும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை இழந்த குமாரசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது.  பா.ஜ.க-வின் எடியூரப்பா மீண்டும் முதல்வரானார்.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பா.ஜ.க 109 இடங்களில் வெற்றி பெற்றது. அந்த நிலையில், கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து மொத்தம் 121 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது காங்கிரஸ் கட்சி. காங்கிரஸ் சார்பில் கமல்நாத் முதல்வரானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க பல கோடி விலை கொடுத்து வாங்கி தங்கள் வசம் இழுத்தது. பின்னர் பா.ஜ.க-வின் ஆலோசனைப்படி 6 அமைச்சர்கள் உட்பட 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க-வில் இணைந்தனர். இதனால், பெரும்பான்மையை இழந்த காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க, பா.ஜ.க சார்பில் சிவராஜ் சிங் சௌகான் முதல்வரானார்.

சிக்கிம் சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 32 தொகுதிகளில் 17 இடங்களை சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களை சிக்கிம் ஜனநாயக முன்னணியும் வென்றெடுத்தன. அதே சமயம், பா.ஜ.க-வால் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெற முடியவில்லை. ஆனால், சிக்கிம் ஜனநாயக முன்னணியின் 10 எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் வசம் வளைத்து, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை அமைத்தது பா.ஜ.க. அதைத் தொடர்ந்து, சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு எம்.எல்.ஏ-க்கள் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைந்தனர். மேலும், அதை தொடர்ந்து நடந்த இடைத்தேர்தலில் 3 இடங்களில் 2 இடங்களை பா.ஜ.க-வே கைப்பற்றியது.

கோவா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில்  காங்கிரஸ் 17 தொகுதிகளில்  வென்றது. அதே சமயம் பா.ஜ.க 13 தொகுதிகளில் வென்றிருந்தது. அதிக இடங்களில் வெற்றி பெற்ற  காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்கும் என்ற சூழல் நிலவியது. ஆனால், திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியில் இருந்த 12 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க விலை பேசி  தங்கள் கட்சியில் சேர்த்துக்  கொண்டது. மேலும், சில சிறிய கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களையும் தங்கள் கட்சியில்  சேர்த்து கொண்டு, யாரும் எதிர்பாராதவிதமாக கோவாவில் தனது ஆட்சியை அமைத்தது பா.ஜ.க.

அது மட்டும் இல்லாமல், கோவாவின் மாநில கட்சியான எம்.ஜி.பி-யின் மூன்று எம்.எல்.ஏ-க்களில் இருவரையும் தங்கள் கட்சியில் சேர்த்து கொண்டது. 2022 கோவா சட்டமன்ற தேர்தலில், 20 இடங்களில் வென்றிருக்கும் பா.ஜ.க சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திருக்கிறது. பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 15 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து காங்கிரஸ் தனது கூட்டணி கட்சியான தி.மு.க ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...நாராயணசாமி முதல்வரானார். சரியாக 4 ஆண்டுகள் 9 மாதங்கள் ஆட்சி நீடித்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள், 6 எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க தங்கள் பக்கம் இழுத்தது. இதனால் பெரும்பான்மையை இழந்த முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியை, எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மற்றும் 3 நியமன எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் ஆட்சியை கவிழ்த்தது பா.ஜ.க.

மேகாலயா சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 21 இடங்களில் வெற்றி பெற்றது காங்கிரஸ். அடுத்தபடியாக, தேசிய மக்கள் கட்சி 19 இடங்களை வென்றது. ஆனால் பா.ஜ.க வெறும் 2 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தாலும், தேசிய மக்கள் கட்சி, ஐக்கிய ஜனநாயக கட்சி, மக்கள் ஜனநாயக முன்னணி கட்சி போன்ற சிறு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தந்திரமாக ஆட்சியை பிடித்தது.

பாஜக இப்படி  குள்ளநரித்தன அரசியல் செய்து தற்போது இந்தியாவில் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் தனியாகவும், கூட்டணி கட்சிகளுடனும்  ஆட்சி செய்து வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜக ஆட்சி பிடித்தது எப்படி என்பதை இந்திய அளவில் அனைத்து மக்களும் நன்கு பார்த்து கொண்டுதான் இருக்கிறார்கள். பொதுமக்கள் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில் முடிவெடுத்து பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்கின்றனர். ஆனால், வெற்றி பெற்ற அந்த மக்கள் பிரதிநிதிகளை பாஜக 30 கோடி வரை விலை கொடுத்து வாங்கி ஒவ்வொரு மாநிலத்திலும் ஆட்சிகளை கவிழ்த்து பாஜக ஆட்சி செய்து வருகிறது. மக்கள் எடுத்த முடிவை மாற்றி அமைக்கக்கூடிய இப்படிப்பட்ட நிலைப்பாடு மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படிப்பட்ட இவர்களை எல்லாம் யார் தண்டிப்பது. மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும். அதிலும், தற்போது தமிழக மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது மிக, மிக அவசியம்.

காரணம் என்னவென்றால், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் பாஜக தனது குள்ளநரித்தன அரசியலை பயன்படுத்துகிறது. ஆனால், அவர்களுடைய எந்த விதமான சித்து வேலைகளும் தமிழ்நாட்டில் மட்டும் எடுபடவில்லை, ஏனென்றால் தமிழ்நாட்டில் நேற்று அரசியல் கட்சி துவக்கிய நடிகர் விஜய் கூட பாஜகவை தங்கள் அருகில் கூட சேர்ந்து வரவிடவில்லை. அதேபோல், ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகவுடன் கள்ளத்தொடர்பை வைத்து கொண்டு, தமிழ்நாட்டு இளைஞர்களை மூளை சலவை செய்து திராவிடத்தை ஒழிப்போம் என்ற குரல் கொடுத்து கொண்டு, பாஜகவிற்கு  எதிரான வாக்குகளை சிதற அடிக்கும் பணியை செய்து கொண்டிருக்கும் சீமான் கூட பாஜகவுடன் நேரடியாக கூட்டணி வைப்பதில்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அதிமுக மட்டும் பாஜகவுடன் கூட்டணி சேருவதற்கான காரணம் தான் என்னவென்று புரியாமல், அந்த கட்சியில் உள்ள பல தலைமை நிர்வாகிகளும், அனைத்து அதிமுக தொண்டர்களும் தயக்கத்தில் உள்ளனர். இந்த சூழ்நிலையில், அதிமுகவில் இருந்து கொண்டு  பாஜகவிற்கு ஆதரவாக சேவகம் செய்து கொண்டிருக்கக் கூடிய சில அமைச்சர்கள் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பயமுறுத்தும் விதத்திலும், சமாதானப்படுத்தும் முயற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...அதிமுகவுடன் நடிகர் விஜய் கட்சி கூட்டணி சேர்ந்தால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகி விடுவார், விஜய் துணை முதல்வராக ஆகிவிடுவார். ஆனால், அதன் பிறகு எடப்பாடி எப்படிப்பட்ட விளையாட்டு விளையாடுவார் என்பது விஜய்க்கு நன்றாக தெரிந்திருக்கும். 2011 தேர்தலில் விஜயகாந்த் அதிமுகவிற்கு உயிர் கொடுத்தது போலவும், அதன் பிறகு விஜயகாந்த் கட்சி ஆனது போலவும், தனக்கு நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை புரிந்து தான் விஜய் அதிமுகவுடன் கூட்டணியை தவிர்த்து இருக்கிறார். மேலும், அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேரும் பட்சத்தில் தன்னுடைய கட்சியின் வாக்கு வங்கி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்பதையும், தேர்தலுக்குப் பிறகு தனக்கு பல விதங்களில் பலம் கூட வாய்ப்பு உள்ளது என்பதையும் நன்றாக உணர்ந்து தான், தனக்கு கிடைக்கும் துணை முதல்வர் பதவியை விட, தனது கட்சியின் வளர்ச்சி முக்கியம் என்ற ரீதியில் முடிவெடுத்த விஜய் அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என முடிவு எடுத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆர் உருவாக்கி கட்டிக் காத்த அதிமுக, ஜெயலலிதாவால் மாநகர் பகுதிகளிலும் வளர்ச்சி அடைந்து, வாக்கு சதவீதத்தை அதிகரித்து கொண்ட அதிமுக, இன்று அந்த கட்சியின் தலைமையும், தொண்டர்களும் சில சுயநலவாதிகளான இரண்டாம் கட்ட தலைவர்களால் எந்த முடிவையும் எடுக்க முடியாத சூழ்நிலை கைதிகளாக நிற்கிறார்கள். எது எப்படியோ அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால்,தமிழ்நாட்டில் அதிமுகவை விழுங்கி, விஸ்வரூபம் எடுக்க ஆசைப்படுகிறது பாஜக...முதல் கட்டமாக தொகுதி பங்கீடு செய்வதில் பிரச்சனை இருக்கும். இரண்டாவதாக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் பாஜக தலையீடு இருக்கும். மூன்றாவதாக அதிமுக வேட்பாளர்களில் யார், யார் வெற்றி பெற வேண்டும் யார், யார் தோல்வி அடைய வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து, அதற்கேற்ற விதங்களில் தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்கும். நான்காவதாக, அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலர் தேர்தல் முடிவுக்கு பிறகு, பாஜக கட்சியில் இணைவதற்கு வாய்ப்பு உள்ளது. (உதாரணமாக கௌதமி, மைத்ரேயன், தங்கமணி, வேலுமணி, ராஜேந்திர பாலாஜி, இப்படி பலரை சொல்லிக் கொண்டே போகலாம்) ஐந்தாவதாக, தேர்தலுக்கு பிறகு அதிமுக எம்எல்ஏக்களை விட பாஜகவின் எம்எல்ஏக்கள் அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது. இப்படி இன்னும் எவ்வளவோ சித்து விளையாட்டுகளை பாஜக கட்சி தமிழ்நாட்டில் நடத்துவதற்கு வாய்ப்புள்ளது என்பதை அதிமுக தலைமையும், கோடிக்கணக்கான அந்த கட்சி தொண்டர்களும் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே, நச்சு செடிகள் நமது தோட்டத்தில் வளர துவங்கினால், கிள்ளி எரிய வேண்டாம், அதை வேரோடு பிடுங்கி தொலைவில் எறிய வேண்டும் என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

MUST READ