spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைரசிகர்கள் அட்டகாசம்! என்னை விட்டுடுங்க! புஸ்ஸி ஆனந்திடம் புலம்பிய விஜய்!

ரசிகர்கள் அட்டகாசம்! என்னை விட்டுடுங்க! புஸ்ஸி ஆனந்திடம் புலம்பிய விஜய்!

-

- Advertisement -

விஜய் கூட்டத்தை பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சப்படுவதாக கூறுவது தவறானது என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.

we-r-hiring

கோவையில் நடைபெற்ற தவெக பூத் கமிட்டி கூட்டம் மற்றும் இந்த கூட்டத்தில் ரசிகர்களின் செயல்பாட்டை குறை கூறி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்தும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறி இருப்பதாவது:- தலைவன் எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்பார்கள். அதுபோன்று தான் நாம் விஜயின் அறிக்கையை பார்க்க வேண்டும். தவெக என்பது விடலைப் பருவக் குழந்தைகளுக்கான கட்சியாகும். அவர் கொடுத்துள்ள அறிக்கையில் மரத்தில் இருந்து குதிக்காதீர்கள். வண்டியில் இருந்து விழுந்துவிடாதீர்கள் என்று சொல்கிறார். இப்படி எல்லாம் யாருக்கு சொல்வார்கள் என்றால் நர்சரி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு  தான். அதே மாதிரி விஜய் படத்தை பார்த்துவிட்டு அதுபோலவே அந்த பசங்க மரத்தில் இருந்து குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். தற்போது தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விஜய் என்ன என்ன செய்தாரோ அதை எல்லாம் செய்யக்கூடாது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கோவையில் நடைபெற்ற தவெக வாக்குச் சாவடி முகவர்கள் மண்டல கருத்தரங்கில் பங்கேற்ற பலருக்கும் பூத் கமிட்டி என்றால் என்ன என்றே தெரியவில்லை. அவர்களுக்கு பூத் என்றால் பால் பூத் என்றுதான் தெரியும். பூத் கமிட்டி என்றால் ஒரு 50 பேரை கூப்பிட்டு பயிற்சி அளிப்பார்கள். அதில் வாக்குச்சாவடிகளில் என்ன என்ன செய்ய வேண்டும் என்று பயிற்சி அளிப்பார்கள். ஆனால் தவெக தரப்பில் பூத் மாநாடு போட்டிருக்கிறார்கள். விஜய்க்கு என்ன செய்வது என்றே  அவர்களுக்கு தெரிய வில்லை. பெரியார் காலத்தில், அண்ணா காலத்தில் கூட இப்படி நடந்திருக்காது. எம்.ஜி.ஆருக்கும், அண்ணாவுக்குவும் இளைஞர்கள் வந்தார்கள், அவர்களுக்கு வாக்கு இருந்தது. வாக்களித்தார்கள். ஆனால் குழந்தைகளை வைத்துக்கொண்டு நீங்கள் எப்படி வாக்களிப்பீர்கள்.

அண்ணா காலத்தில் திமுக மாநாட்டில் சத்தியவாணி முத்து, கலைஞர், எம்.ஜி.ஆர், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற மூத்த தலைவர்கள் கலந்துகொள்வார்கள். தவெக மாநாட்டில் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா என்று 2 பெருந்தலைவர்கள் தான் கலந்துகொண்டார்கள். அவர்களில் பொதுச்செயலாளர் ஆனந்த் சேரை தூக்காதே என்கிறார். மற்றொருவர் சின்ன குழந்தை பேசுபவது போல பேசுவார். கைகளில் பேனா வைத்திருப்பார். அவர்தான் ஆதவ் அர்ஜுனா. இதெல்லாம் பார்த்து மற்ற கட்சிகளுக்கு தவெக போட்டி என்கிறீர்கள். அந்த கருத்தரங்கை பூத் கமிட்டி என்று சொன்னார்கள். விஜய் என்ன பேசினார் என்றே தெரிவில்லை. அவர் மேடையை விட்ட இறங்கிய உடன் ஆளுக்கு 2 சேர்களை தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள். போட்ட சேர்களில் பல சேர்களை காணவில்லை என்கிறார்கள்.

விஜயின் பேச்சை கேட்டு எதிர்க்கட்சிகள் பதறுவதாக ஆதவ் அர்ஜுனா சொல்கிறார். விஜய்க்கு மத்திய அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு, வேறு ஒரு காரணத்திற்காக வழங்கினார்கள். நாட்டிலேயே இவ்வளவு பெரிய பாதுகாப்பு குறைபாட்டை யாரும் பார்த்து இருக்க மாட்டார்கள். பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பிளாக் கேட்ஸ் பாதுகாப்பு கொடுப்பதைதான் எல்லோரும் பார்த்திருப்பார்கள். ஆனால் மரத்தில் இருந்து தலை மீது விழுபவர்களை பார்த்திருக்க மாட்டார்கள். அப்படி செய்தால் ஒய் பிரிவு பாதுகாப்பு என்ன செய்வார்கள். அதில்தான் விஜய் மிகவும் நொந்து போய்விட்டார். இது குறித்து தன்னுடன் இருப்பவர்களிடம் சொல்லி புலம்பியுள்ளார்.

சிறுபான்மையினரின் வாக்குகளை விஜய் பிரிப்பார் என்று கருத்து உள்ளது. அது இஸ்லாமியர்களையும், கிறிஸ்தவர்களையும் அவமதிப்பதாகும். தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மை மக்கள் அவ்வளவு விவரம் தெரியாமல் இல்லை. சிறு வயதினர், இளைஞர்கள் விஜய்க்கு வாக்களிப்பார்கள். 7 தொகுதிகளுக்கு சேர்த்து 10 ஆயிரம் பேர் பூத் கமிட்டிக்கு வந்துள்ளனர். அவர்களில்  4 ஆயிரம் பேருக்கு தான் வாக்குகளிக்கும் வயது உள்ளது. இந்த வாக்குகள் ஒரு கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு கூட உதவாது. நாட்டில் ஏற்கனவே இஸ்லாமியர்களுக்கு என்ன கொடுமைகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்ன ஆபத்தில் அவர்கள் உள்ளார்கள் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். இந்த நேரத்தில் குழந்தைகளை வைத்து விளையாட மாட்டார். தமிழ்நாட்டில் கிறிஸ்துவர்கள் சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் திமுகவை விட்ட செல்ல மாட்டார்கள். அப்படி சென்றால் என்ன ஆபத்துக்கள் வரும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும்.

தவெக ஆட்சிக்கு வந்தால் ஊழல் இருக்காது என்று விஜய் சொல்கிறார். ஆனால் அவர் வந்தால் தமிழ்நாடே இருக்காது. அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கூட ஊழல் உள்ளது. தனியாக இருக்கும்போதே இவருக்கு மேனேஜர் சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுக்க வேண்டும். சாப்பாடு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து தர வேண்டும். தற்போது அவர் அரசு ஊழியராக இருக்கும்பட்சத்ததில் மிகப்பெரிய ஊழல் வாதியாக இருந்திருப்பார். இவர்கள் தான் ஊழல் ஒழிப்பு பற்றி பேசுகிறார்கள். மத்திய அரசு சாலை போடுவதாக கூறி 8000 கோடியை ஊழல் செய்தார்கள். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14000 கோடி கடன் பெற்ற வழக்கில் தப்பியோடிய மெகுல் சோக்சி, அவரது உறவினர் நீரவ் மோடி போன்றவர்கள் தொடர்பான வழக்கு ஆவணங்களை அமலாக்கத்துறை எரித்துள்ளது. இவற்றை எல்லாம் அவர் அழித்துவிடுவாரா?

2026 சட்டமன்றத் தேர்தலில்  விஜய் 4-5 சதவீத வாக்குகளை வாங்குவார். மிகவும் உச்சத்திற்கு செல்கிறார் என்றால் அதிகபட்சமாக 7 சதவீதத்திற்கு மேல் செல்ல முடியாது. எம்ஜிஆர் வேறு, விஜய் வேறு. எம்ஜிஆர் திமுகவில் இருந்து பிரச்சாரம் செய்துள்ளார். அண்ணாவுடன் இருந்துள்ளார். எம்ஜீஆரை போல பேச சொல்லுங்கள் விஜயை. அவருடைய பேச்சே அந்த காலத்தில் எடுபடாது. அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் போன்ற தலைவர்கள் பேசினால் மணிக்கணகில் மக்கள் உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள். தவெகவில் ஒரு ஆளை அப்படி காட்ட சொல்லுங்கள். ஏன் கட்சி தலைவர் விஜயை பேச சொல்லுங்கள் பார்ப்போம். திட்டமிடப்பட்ட ஒரு கூட்டத்தில் பேச முடியவில்லை என்றால் இவரெல்லாம் என்ன தலைவர்?

சும்ம ஷோவுக்காக ஆளை காட்டுகிறார்கள். 4 முறை ஒவ்வொரு ஊருக்கும் போய்விட்டு வந்தால் இந்த கூட்டம் குறைந்துவிடும். தற்போது கோவைக்கு முதன்முறை போயிருக்கிறார். இன்னும் 2 முறை சென்றால் கூட்டம் கலைந்துவிடும். ஒரு 10 பேர் கத்திக்கொண்டே வருவார்கள். தேர்தல் நெறுங்க நெறுங்க இது நமக்கு தெரியவரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ