Homeசெய்திகள்கட்டுரைசீமான் வழக்கில் திடீர் திருப்பம்! பாஜக செய்த அவசர ஏற்பாடு! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

சீமான் வழக்கில் திடீர் திருப்பம்! பாஜக செய்த அவசர ஏற்பாடு! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

-

- Advertisement -

சீமான் விவகாரத்தில் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என வடஇந்திய ஊடகங்களை கட்டமைத்து வருவதாகவும், தமிழக அரசு மற்றும் நடிகை தரப்பில் பதில மனுதாக்கல் செய்யும்போது நீதிமன்றத்திற்கு முழுமையான விவரங்கள் தெரியவரும் என்றும் பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சீமான் மீதான பாலியல் வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது தொடர்பாக பத்திரிகையாளர் தாமேதரன் பிரகாஷ் அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சீமான் விவகாரம் குறித்து பேசிய முன்னாள் அட்வகேட் ஜெனரல் ஒருவர், வடஇந்திய ஊடகங்கள் முழுக்க முழுக்க சீமானை மாநில அரசு பழிவாங்குவது போன்ற பிம்பத்தை கட்டமைத்து வருகின்றன. உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வருகிறது தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இதுபோன்று கட்டமைத்து வருவதாக காண்பித்து வருகின்றன. ஆர்எஸ்எஸ் ஆங்கில, இந்தி ஊடகங்கள் சீமானுக்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் செய்திகளை பரப்பி வந்தன. நிர்நிமேஷ் துபே, ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு ஆதரவான வழக்கறிஞர் ஆஜராகிறார். இந்த வழக்கில் நடிகை தரப்புக்கு நோட்டீஸ்தான் வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் பதில் அளிக்க வேண்டியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் எது என்றால் நடிகையை, பாலியல் தொழிலாளி என்று சீமான் குற்றம்சாட்டினார். ஆனால் அவரது கருத்துக்கள் எல்லாம் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படவில்லை. நடிகை புகார் அளித்தார், பின்னர் வாபஸ் பெற்றுவிட்டார் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

2011 மே மாதம் சீமான் மீது நடிகை புகார் அளிக்கிறார். பின்னர் அவர் ஜுன் மாதம், ஜெயலலிதாவை சென்று சந்தித்தார். நடராஜன், பழ.நெடுமாறன் தொடர்புடைய வெளிநாட்டு நிதிகளை ஈழத்தமிழர்கள்தான் கவனித்து வந்தனர். அவர்கள் மூலம் சீமானுக்கு 20 கோடி நிதி வருகிறது. பின்னர் சீமான் இலை மலர்ந்தால், ஈழம் மலரும் என்கிறார். அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரமும் மேற்கொண்டார். ஜுன் மாதத்திற்கு பின்னர் புகார் கிடப்பில் போடப்பட்டது. அதற்கு பின்னர் நடிகை கொடுத்த புகாரை அவரே திரும்ப பெற்றுக்கொண்டார். அவரது மனநிலையை அவரே கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார். இந்நிலையில் பாலியல் புகார் தொடர்பாக உயர்நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிடுகிறபோதும், நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். ஆனால் நடிகையும் நேர்மறையாகத்தான் பதில் அளித்துள்ளார். பாலியல் தொழிலாளி என்று சீமான் சொன்ன பிறகுதான் அவர் அழுது எதிர்வினை ஆற்றினார். அது நடிப்பு இல்லை. சீமானின் பேச்சுக்கு அனைத்து பெண்கள் அமைப்புகளுமே ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால் உச்சநீதிமன்றத்தில் நடிகை புகார் அளித்துவிட்டு அதை வாபஸ் பெற்றுள்ளதாகவும், தற்போது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக விசாரணை நடத்துகிறார்கள் என்றுதான் வடஇந்திய ஊடகங்கள் வாயிலாக கட்டமைத்தனர். சமரசம் செய்ய முயற்சிகள் நடைபெறுகிறதா என்றும் பார்க்க வேண்டும் என சொல்கிறார்கள்.

நெருக்கடிக்குள் இந்தியா - புதிய அரசுக்கு காத்திருக்கும் சவால்

வடஇந்திய ஊடகங்களை சீமானுக்கு ஆதவாக செயல்படவைத்தது ஆர்எஸ்எஸ் – பாஜகதான். நேற்றே சீமானுக்கு ஆதரவாக ஹெச்.ராஜாவும், அண்ணாமலையும் கருத்து சொன்னார்கள் அல்லவா?. இவர்கள் இருவரும் வெளிப்படையாக சொல்வார்கள். அதற்கு பிறகு குருமூர்த்தி சொல்லாமல் சொல்வார். அவரது நடவடிக்கைகள் எல்லாம் ரகசியமாக இருக்கும். சீமான் சொன்னது செய்தது எல்லாமே வைத்து பார்த்தால் அவர் பாலியல் தொழிலாளி ஆகத்தான் இருந்துள்ளார். நடிகையிடம் இருந்து ஒரு கோடி வாங்கியுள்ளார். நிறைய பெண்களிடம் அவர் இதுபோன்று செய்துள்ளதற்கான தகவல்கள் உள்ளன. காளிமுத்துவின் மகள் எதிர்பாராத விதமாக அதுபோன்ற ஒரு விஷயத்திற்குள் செல்கிறபோது, அவருக்கு நிறைய சொத்து உள்ளதால் அவரை திருமணம் செய்து கொண்டார்.

நடிகைக்கு வேறு நபருடன் பழக்கம் இருந்தது. அது தொடர்பாக பிரச்சினைகள் நடைபெற்றது என்பது வேறு கதை. ஆனால் சீமான் விஷயத்தில் நடந்தது என்ன? 2011ல் அளிக்கப்பட்ட புகாரை ஜெயலலிதா அரசு ஏன் விசாரிக்கவில்லை. எடப்பாடி ஆட்சியில் ஏன் விசாரிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் புகார் ஒன்று அளித்து, அது பிரச்சினை ஆவதற்கு முன்பாக அந்த நடிகையை சமாதானம் செய்து புகாரை திரும்ப பெறச் செய்தனர். 2வது முறையாக அந்த புகாரை தள்ளுபடி செய்யக்கோரி நீதிமன்றத்திற்கு சென்றது சீமான்தான். அதைதான் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவிட்டது. பெரியார் குறித்த அவதூறு கருத்துக்களை தெரிவித்ததற்காக சீமான் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த வழக்கு முக்கியத்துவம் பெருகிறது.

நடிகை குறித்து சீமான் பேசிய அவதூறுகள் குறித்து தமிழ்நாடு அரசு மற்றும் நடிகையின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டால், உச்சநீதிமன்றத்தில் மிகவும் கவனமுடன் பரிசீலிக்கப்படும். நடிகை விவகாரத்தில் முகாந்திரம் இருப்பதாக உச்ச நீதிமன்றம் கருதினால் மட்டுமே விசாரணை தொடர அனுமதிப்பார்கள். தற்போது இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முழுமையாக கன்வீனியன்ஸ் ஆகவில்லை. போலிஸ் மற்றும் நடிகை தரப்பில் தாக்கல் செய்யப்படும் பதில் மனுவில் அனைத்து தகவல்களும் இடம்பெற்றிருக்கும். அப்போது, இந்த வழக்கின் முழுமையான விவரங்கள் தெரியவரும். இப்போது நடிகையுடன் நான் எப்படி சமரச பேச்சுவார்த்தை நடத்துவது என்று கேட்கிறார்.

சீமான் கமியூனிஸ்ட்டுகளை பற்றி அவதூறாக பேசுகிறார். தமிழ் ஈழம் என்கிற தேசிய இன பிரச்சினையை, அந்த மக்களின் துயங்களை எல்லாம் மண்ணைப் போட்டு மூடி, பாஜகவின் ஆதரவோடு தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியை கொண்டுவந்து, அதே தடை செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து காசை வாங்கினார். பெரியார், சேகுவாவேராவை பேசி பேசி மேலே வந்து மேடைகளில் இடம்பெற்று கவனத்தை கவர்ந்த உடன் ஆர்.எஸ்.எஸ் சொன்னதற்காக பெரியாரை அவதூறாக பேசினார். அவருக்கு கூட இருந்த நண்பர் விஜய் கூட இதனை சகிக்க முடியாமல் விலகிப் போய்விட்டார். தமிழக அரசியல் வரலாற்றில் சீமானை போன்ற கேவலப்பட்ட ஒரு அரசியல்வாதியை பார்க்க முடியாது. அவருக்கு 8.2 சதவீத வாக்குகள் எல்லாம் இல்லை. இனி அவர் 3 சதவீத வாக்குகளை தாண்டினாலே பெரிய விஷயம். பாதி வாக்குகளை தவெக எடுத்துக்கொள்ளும். வாக்குகளில் பாதி பேர் பெண்கள். அவர்களிடம் இருந்து ஒரு வாக்குகள் விழாது. தமிழ்தேசிய அரசியலுக்கு வந்தவர்கள் பாதிபேர் பெரியாரிஸ்ட்டுகள் அவர்களது வாக்கும் விழாது.

சீமான் விசாரணைக்கு ஆஜராகியபோது, வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு மொத்தமே 500 பேர் தான் வந்திருந்தனர். அதுவும் வளசரவாக்கம் மெயின் ரோட்டில் எல்லாம் திரட்டவில்லை. ஸ்ரீதேவிகுப்பம் சாலையில் இருந்து காவல் நிலையம் வரைதான். சென்னையில் 200 வட்டங்கள் உள்ளன. வட்டத்திற்கு 2 பேரை திரட்ட முடியாதவர்தான் சீமான். கான்ட்ரோவெர்சியலான விஷயம் என்பதால் அனைத்து ஊடகங்களும் நேரடி ஒளிபரப்பு செய்தனர். புரட்சி என்றால் அன்று சென்னை ஸ்தம்பித்திருக்க வேண்டும். சென்னை நகரம் இயங்கி இருக்கக்கூடாது. சி.எம். மூவ் ஆகி இருக்கக்கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ