Homeசெய்திகள்ஆவடிஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம்:ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:

ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம்:ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:

-

ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்ற உத்தரவின்படியும், மாவட்ட ஆட்சியர் அவர்களின் முன் அனுமதி பெற்று ஆக்கிரமிப்புகளை அகற்றிய ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதனை எதிர்த்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் மாநில மைய முடிவின்படி நேற்று 29/08/2023 காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாநில நிர்வாகிகள் உட்பட ஐந்து மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் 200 நபர்களை காவல் துறையினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து ,இன்று ஆவடி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் ப. செந்தில்முருகன் தலைமையில், அலுவலக பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, ஆவடி வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் காத்திருப்பு  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்போராட்டம் பணி நீக்கம் ரத்து செய்யும் வரை தொடர்ந்து நடைபெறும் என ஆவடி வட்டாட்சியர் அலுவலக பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் வட்டத்தலைவர் திரு.வசந்த குமார், வட்ட செயலாளர் திருமதி.கீதா பொருளாளர்.திரு.மோகன்பிரபு மற்றும் சக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

MUST READ