- Advertisement -
ஆவடி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 நபர்களை அம்பத்தூர் மதுவிலக்கு காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்..
ஆவடி அடுத்த வீராபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், அம்பத்தூர் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில், வீராபுரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது நேற்று அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த, செங்குன்றம் அடுத்த வாணியன் சத்திரம் பகுதியை சார்ந்த வினோத், கார்த்திக் இருவரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் மறைத்து வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவையும், பறிமுதல் செய்து இருவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.