Homeசெய்திகள்சென்னைசென்னையில் 48வது புத்தக கண்காட்சி: முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி & பபாசி விருதுகள் அறிவிப்பு -...

சென்னையில் 48வது புத்தக கண்காட்சி: முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி & பபாசி விருதுகள் அறிவிப்பு – யாருக்கு? வெளியான பட்டியல்!

-

- Advertisement -

சென்னையில் வரும் 27ம் தேதி தொடங்க உள்ள 48வது புத்தகக் காட்சியில் வழங்கப்பட உள்ள கலைஞர் பொற்கிழி விருதுகள் 6 எழுத்தாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் சார்பில், 48-வது சென்னை புத்தகக் காட்சி டிச.27-ம் தேதி தொடங்கி ஜன.12-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 சென்னையில் 48வது புத்தக கண்காட்சி: முத்தமிழறிஞர் கலைஞர் பொற்கிழி & பபாசி விருதுகள் அறிவிப்பு - யாருக்கு? வெளியான பட்டியல்!

டிச.27-ம் தேதி மாலை 4.30 மணி அளவில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.தொடக்க நிகழ்ச்சியில், கலைஞர் பொற்கிழி விருதுகளையும், பபாசி வழங்கும் விருதுகளையும் துணை முதல்வர் வழங்குகிறார்.

பபாசி அமைப்புக்கு கலைஞர் வழங்கிய நிதியில் இருந்து வழங்கப்படும் இவ்விருதை இந்தாண்டு, 1. பேராசிரியர் அருணன் – உரைநடை 2. நெல்லை ஜெயந்தா – கவிதை 3. சுரேஷ் குமார இந்திரஜித் – நாவல் 4. என். ஸ்ரீராம் – சிறுகதைகள் 5. கலைராணி – நாடகம் 6. நிர்மால்யா – மொழிபெயர்ப்பு ஆகியோர் பெற இருப்பதாக பபாசி அமைப்பு அறிவித்துள்ளது.

மொத்தம் 17 நாள்கள் நடைபெற உள்ள இந்த  புத்தகக் காட்சிக்கு 900 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் 10 சதவீதம் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!

MUST READ