spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைகொல்கத்தாவில் மோசமான வானிலை சென்னையில் தரை இறங்கிய விமானம்

கொல்கத்தாவில் மோசமான வானிலை சென்னையில் தரை இறங்கிய விமானம்

-

- Advertisement -

கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால், துபாயிலிருந்து 274 பயணிகளுடன் கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல்  சென்னையில் வந்து தரை இறங்கி உள்ளது.

கொல்கத்தாவில் மோசமான வானிலை சென்னையில் தரை இறங்கிய விமானம்கொல்கத்தாவில் மோசமான வானிலை நிலவுவதால்,  துபாயிலிருந்து கொல்கத்தா சென்ற எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் கொல்கத்தாவில் தரையிறங்க முடியாமல் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. அதன்படி எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 274 பயணிகளுடன் துபாயில் இருந்து இன்று காலை கொல்கத்தா சென்றபோது,அங்கு கடுமையான பணி மூட்டத்துடன் மோசமான வானிலை நிலவியதால், கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அந்த விமானத்தை சென்னைக்கு திருப்பி அனுப்பினர்.

we-r-hiring

இதை அடுத்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 274 பயணிகளுடன் இன்று காலை 10 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வந்து தரை இறங்கி உள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்திலேயே அமர வைக்கப்பட்டுள்ளனர். பயணிகளுக்கு குடிநீர் சிற்றுண்டி போன்றவைகள் விமானத்துக்குள்ளையே வழங்கப்படுகின்றன.

கொல்கத்தாவில் வானிலை சீரடைந்த பின்பு, அந்த விமானம் சென்னையில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ