பெருக்கெடுத்து ஓடும் வெள்ளநீரில் சிக்கிய சென்னை மக்களின் பரிதாபங்கள்!!!
தண்ணீரால் தத்தளிக்கும் சாலையில் செல்போன் விழுந்ததால் பதறிப்போன ஸ்விக்கி ஊழியர்.தண்ணீர் சாலையில் நடக்க முடியாமல் நிலை தடுமாறி கீழே விழுந்த மூதாட்டி
தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி ஆறு குளம் போல காட்சியளித்தது. சென்னை வாழ்மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

இரவு முழுதும் பெய்த மழையால் மழைநீர் தேங்கி இருப்பதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி மேயர் அவர்கள் பல இடங்களில் ரோந்து பணியை மேற்கொண்டு தண்ணீரினை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். சில மணி நேரங்களில் சாலையில் தொடர்ந்து மழைநீர் தேங்கிய பகுதியில் மழைநீரினை துரிதமாக வெளியேற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் மாநகராட்சி ஊழியர்கள் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆய்வின்போது மாநகராட்சி கூடுதல் தலைமைச் செயலாளர்,ஆணையாளர், தலைமை பொறியாளர், உட்பட மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


