சென்னையில் வெளுத்துவாங்கிய கனமழை
சென்னையில் பரவலாக ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.
சென்னையில் காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மதிய வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் திடீரென வானம் இருண்டு குளிர்காற்று வீசியது. சற்று நேரத்திற்கெல்லாம் இடி மின்னலுடன் பலத்த காற்று மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் முகப்பேர், அரும்பாக்கம், அம்பத்தூர், அண்ணாநகர், கோயம்பேடு, தேனாம்பேட்டை, நுங்கம்பாக்கம், அடையார், கிண்டி, வடபழனி, சேப்பாக்கம், எழும்பூர், திருவல்லிக்கேணி, அமைந்தகரை, வில்லிவாக்கம், அயனாவரம், மாதவரம், பாடி, ஓட்டேரி, ரெட்டேரி உள்ளிட்ட சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.
இதன் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களின் முகப்பு விளக்குகள் எரியவிட்டு சென்றனர். பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் தாழ்வான சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் சுமார் ஒரு மணி நேரம் பெய்த காற்று மழையினால் வானிலை மாற்றம் ஏற்பட்டு இதமான சுழல் நிலவியது.