Homeசெய்திகள்சென்னைசென்னை மே.மாம்பலத்தை சேர்ந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான்...

சென்னை மே.மாம்பலத்தை சேர்ந்த பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தான் நபர் கைது

-

சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த திருமணமான பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை வைத்து 10 லட்சம் கேட்டு மிரட்டிய ராஜஸ்தானை சேர்ந்த நபர் கைது… 

சென்னை மேற்கு மாம்பலத்தில் இளம் பெண் ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார் இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் funkie app மூலம் ராஜஸ்தானை சேர்ந்த பாரூக் என்ற வாலிபர் அறிமுகமாகியுள்ளார்.

பாரூக்

இருவரும் செல்போனில் பேசி பழகி உள்ளனர் இருவரும் தங்களது நிர்வாண புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இளம்பெண் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளிட்டு விடுவதாக மிரட்டி 10 லட்சம் கேட்டு மிரட்டி உள்ளார்.

மேலும் அவரது கணவருக்கும் இளம்பெண்ணின் புகைப்படத்தை அனுப்பி உள்ளார். இது தொடர்பாக இளம் பெண் கொடுத்த புகாரின் பேரில் தெற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து,  ராஜஸ்தானை சேர்ந்த பாரூக் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

MUST READ