பூவிருந்தவல்லி சவீதா கல்லூரி மாணவர்கள் போராட்டம்
பூவிருந்தவல்லியில் உள்ள சவீதா கல்லூரியில் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சவீதா கல்லூரியில் MBA படித்து வரும் மாணவர்களிம் பெற்ற கல்வி கட்டணத்தை கட்டவில்லை என கூறியதால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். MBA மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா 3 லட்சம் வரை கட்டிய தொகையை கல்லூரி டீன் மற்றும் அட்மிஷன் பொறுப்பாளர் கையாடல் செய்துவிட்டதாக புகார் தெரிவித்துள்ளனர்.
மேலும் டீன் மற்றும் அட்மிஷன் பொறுப்பாளர் வாங்கிய பணத்திற்கு கல்லூரி பொறுப்பாகது என கல்லூரி நிர்வாகம் கூறியதால் கல்லூரி முன்பு 100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு போராட்டம் செய்து வருகின்றனர்.