- Advertisement -
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையனுக்கு திடீரென்று நுரையீரல் தொற்று ஏற்பட்டதால் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது. இந்நிலையில் அவர் இன்று சிகிச்சை பலனின்றி த.வெள்ளையன் காலமானார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.