spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதிருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் திருப்பாவை நிகழ்ச்சி – அமைச்சர் பி.கே. சேகர்பாபு

திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் திருப்பாவை நிகழ்ச்சி – அமைச்சர் பி.கே. சேகர்பாபு

-

- Advertisement -

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் 108 பேர் பாடிய திருப்பாவை பாசுரங்களை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் திருப்பாவை நிகழ்ச்சி – அமைச்சர் பி.கே. சேகர்பாபுசென்னை திருவல்லிக்கேணி பார்த்தாரதி கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் 108 பேர் பாடிய  திருப்பாவை பாசுரங்கள் நிகழ்ச்சியை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

we-r-hiring

கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் கந்த சஷ்டி பாராயணம் சென்னை வடபழனி ஆண்டவர் கோவில், கந்தகோட்டம், திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோவில், அறுபடை வீடு முருகன் கோவில்களில் பாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 3 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயிலில் திருப்பாவை பாராயணம் பாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இந்த ஆண்டு மார்கழி மாதத்தை முன்னிட்டு திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் தமிழ்நாடு இசைக் கல்லூரி மாணவர்கள் 108 பேர் பாடிய திருப்பாவை பாசுரங்களை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

MUST READ