கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை பெண்கள் நம்ப வேண்டாம். கடன் வாங்கும் பொழுது வட்டியை கவனித்து வாங்க வேண்டும். விண்ணப்பம் செய்யும் பொழுது அதில் வரும் புகைப்படங்களை வைத்து மார்பிங் செய்கின்றனர். பெண்கள் இதனை துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசிய அவா், பெண்கள் அனைவரும் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வைத்திருக்க வேண்டும்.திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று 24.06.25 நடைபெற்ற TEXTILE INDUSTRY COALITION – STAKE HOLDER MEETING AND 2nd STEERING COMMITTEE MEETING-ல் சமூக நலத்துறை அமைச்சர் திருமதி கீதாஜீவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில்:- கணவன் மனைவி என இருவரும் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். சமூக மாற்றம் ஏற்பட்டே ஆக வேண்டும். இதற்கு குழந்தைகளிடம் ஆண், பெண் இருவரும் சமம் என வளர்க்க வேண்டும். தமிழ்நாடு அரசு பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.
சுய உதவி குழுக்கள், சிறு, குறு தொழில்கள் முதல் பெரிய தொழில்கள் வரை பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பெற்றோர்கள் ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் கண்காணிக்க வேண்டும். பெண்கள் போலியாக வரும் குறுஞ்செய்திகளை நம்ப வேண்டாம் கடன் தருவது போல் குறுஞ்செய்திகள் அனுப்பப்படும். அதனை கிளிக் செய்யும் பொழுது நமது தகவல் அனைத்தும் திருட வாய்ப்புள்ளது. அதே போல் கடன்கள் வாங்கும் போது வட்டி விகிதம் அனைத்தையும் பார்த்து வாங்க வேண்டும். தினசரி வட்டி, கந்து வட்டி மீட்டர் வட்டி எனக் கூறுகின்றனர். இதனை தடை செய்யவும் முதலமைச்சர் சட்டம் இயற்றியுள்ளார்.எல்லா விண்ணப்பங்களுக்கும் தற்போது புகைப்படம் கேட்கின்றனர். இந்த புகைப்படங்களை பெண்கள் வாட்ஸ் அப் மூலம் அனுப்பும் பொழுது அதனை வைத்து மார்பிங் செய்து பெண்களை ஏமாற்றுகின்றனர். பெண்கள் பிரச்சினைகளை சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அனைத்து பெண்களும் கையில் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வைத்திருக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் அன்பு கரங்கள் திட்ட மூலம் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. பெண் குழந்தைகள் இல்லாமல் ஆண் குழந்தைகளுக்கும் பல்வேறு திட்டங்களை அரசு செய்துள்ளது” என்று பேசினார்.
