spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசர்வே எண், பட்டா விவரங்களை மொபைலில் அறிய புதிய செயலி…

சர்வே எண், பட்டா விவரங்களை மொபைலில் அறிய புதிய செயலி…

-

- Advertisement -

சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் ஃபோனில் அறிவதற்காக வருவாய்துறை உருவாக்கி வரும் புதிய செயலி, இந்த ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.சர்வே எண், பட்டா விவரங்களை மொபைலில் அறிய புதிய செயலி…தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் “அன்னம் தரும் அமுத கரங்கள்” நிகழ்ச்சியின் தொடர் நாளான 125-வது தினத்துக்குரிய நிகழ்வு, இன்று கொளத்தூரில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டிலான இந்த நிகழ்ச்சியில் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறுசுவை சிற்றுண்டி உணவுகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பல பேரது பசியை போக்கக்கூடியதாக அன்னம் தரும் அமுத கரங்கள் திட்டம் உள்ளதென பாராட்டு தெரிவித்தார். பேட்டியின் போது, பட்டா வழங்கும் நடைமுறையை எளிமையாக்கி இருப்பதாக கூறிய வருவாய்த்துறை அமைச்சர், இதுவரை 16 லட்சம் பேருக்கு பட்டா கொடுத்து இருப்பதாக குறிப்பிட்டார்.

we-r-hiring

1962-ஆம் ஆண்டு நகரத்தில் குடியிருக்கும் நபர்களுக்கு பட்டா கொடுக்கக் கூடாது என இருந்த நிலையை மாற்றி, இன்று நகரத்தில் இருப்பவர்களுக்கும் பட்டா வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள மக்களுக்கு பட்டா வழங்கியிருப்பது,அப்பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளதென்று கே.கே.எஸ்.எஸ்.ஆர். கூறினார்.சர்வே எண், பட்டா விவரங்களை மொபைலில் அறிய புதிய செயலி…தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் பாதிப்பு ஏதாவது ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, இயல்பான அளவில் தான் மழை பெய்துள்ளது என்றும் பெரிய அளவில் பாதிப்பு எதும் இல்லை என்றும் அவர் பதிலளித்தார்.  நீலகிரி மாவட்டத்தில் மட்டும் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டதாகவும் அதுவும் சரி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விவரித்தார்.

சர்வே எண் மற்றும் பட்டா விவரங்களை பெறுவதை எளிதாக்கும் வகையில் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த திட்டத்துக்கான பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன என்று கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். அந்த செயலியை மக்கள் பயன்படுத்தும் போது அது எளிதாக இருக்க வேண்டும் எனும் அடிப்படையில் அது உருவாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். சர்வே எண் மற்றும் பட்டா விபரங்களை, மொபைல் ஃபோன் வாயிலாக அறிய உதவும் அந்த புதிய செயலி, இந்த ஆண்டுக்குள் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

மேலும், வடகிழக்கு பருவமழைக்கான பாதுகாப்புப் பணிகள் குறித்து, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருவதை அவர் சுட்டிக்காட்டினார். வருவாய் துறையில் உள்ள பேரிடர் துறையும் அதற்கான பணிகளை செய்து வருவதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கினார்.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரால் முதியவர் காயம்

MUST READ