ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் என்று அன்று முதல் இன்று வரை கோடான கோடி ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முழுவதும் நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. மேலும் கூலி படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இப்படம் 2025 ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து நடிகர் ரஜினி, ஜெயிலர் 2 திரைப்படத்தில் இணைய உள்ளார். ஏற்கனவே ரஜினி இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் பின்னர் நடிகர் ரஜினி தன்னுடைய 173-வது திரைப்படத்தை யாருடைய இயக்கத்தில் நடிக்க போகிறார் என்று எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
Petta 🤝 Coolie 🤝 Jailer@rajinikanth @Dir_Lokesh @Nelsondilpkumar @karthiksubbaraj pic.twitter.com/ey2z3Z2mFb
— Sun Pictures (@sunpictures) March 20, 2025

இந்த நிலையில் நடிகர் ரஜினி, பேட்ட படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ஜெயிலர், ஜெயிலர் 2 படத்தின் இயக்குனர் நெல்சன், கூலி படத்தின் இயக்குனர் லோகேஷ் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.