மதுரவாயலைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் 250 ஆணிகள் மற்றும் 4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நூலைக் கொண்டு விஜயகாந்த் ஓவியத்தை தத்ரூபமாக வரைந்து அசத்தியுள்ளார். ஆணிகள், நூலைக்கொண்டு விஜயகாந்த் ஓவியம் வரைந்து அப்பகுதி மக்களை அசர வைத்த பள்ளி மாணவர்.
தேமுதிக முன்னாள் தலைவரும் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அவரது சிலைகள் மற்றும் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. பலரும் புதுவிதமான முயற்சிகளில் விஜயகாந்திற்கு தங்களது மரியாதையை செலுத்துகின்றனர். அந்த வகையில் சென்னை மதுரவாயலைச் சேர்ந்த அபிஷேக் என்ற பத்தாம் வகுப்பு மாணவர் 250 ஆணிகள் மற்றும் 4 கிலோ மீட்டர் தூரம் கொண்ட நூல் மூலம் விஜயகாந்த் ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், “நான் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். எனது தந்தைக்கு விஜயகாந்த் என்றால் மிகவும் பிடிக்கும். நான் சின்ன சின்ன ஓவியங்களை வரைந்து வந்தேன். விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இந்த ஓவியத்தை வரைந்தேன். 3 வாரமாக முயற்சித்து, 250 ஆணிகள் மற்றும் 4 கிலோ மீட்டர் நூலைக் கொண்டு இந்த ஓவியத்தை தத்ரூபமாக வரைந்தேன். புதிய முயற்சி ஒன்றை எடுக்க நினைத்தேன் அதற்காவும், அப்பாவிற்கு விஜயகாந்த் பிடிக்கும் என்பதற்காகவும் இந்த ஓவியத்தை வரைந்துள்ளேன்” என்றார்.
‘எனக்கு எல்லா உசுரும் ஒன்னு தான்’….. விஜயகாந்தை நினைவு கூர்ந்த ‘அலங்கு’ படக்குழுவினர்!