தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜீவா தற்போது அகத்தியா எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தினை பா.விஜய் இயக்குகிறார். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கிடையில் ஜீவா, பிளாக் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஜீவாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தினை அறிமுக இயக்குனர் கே ஜி பாலசுப்ரமணி இயக்கியுள்ளார். பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து உள்ள நிலையில் சாம் சி எஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார்.
கோகுல் பினாய் இதன் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொண்டுள்ளார். பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கவனித்திருக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும். இந்த படமானது வருகின்ற அக்டோபர் 11 திரைக்கு வருகிறது. அதற்கான முழு ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜீவா பிளாக் படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி, “பிளாக் திரைப்படம் என்பது மனதை நெகிழ வைக்கும் படம். சைக்கலாஜிக்கல் படம். மேலும் இது சயின்ஸ் பிக்சன் திரில்லர் படம் என்பதால் இளைஞர்களுடன் இந்த படம் கனெக்ட் ஆகும். மூளையை முறுக்கும் படம். இந்த படம் பார்க்கும்போது உங்களுடைய மூன்றாவது கண்ணே திறக்கும். எனவே இந்த படத்தினை புரிந்து கொள்ளவே மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும். ஒரு காட்சியை மிஸ் பண்ணிட்டா கூட கதையை மிஸ் பண்ணது போல் இருக்கும். எனவே நீங்கள் இந்த படம் பார்க்கும்போது மொபைலையே பயன்படுத்த முடியாது. நிச்சயம் இந்த படம் வித்தியாசமான அனுபவத்தை தரும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த படம் பார்க்கும்போது நீங்கள் மொபைலையே பயன்படுத்த முடியாது…. ‘பிளாக்’ படம் குறித்து நடிகர் ஜீவா!
-
- Advertisement -