Homeசெய்திகள்சினிமாரஜினியால் ஒரே பிரச்சனை... போயஸ் கார்டன் வீட்டு பெண் புகார்...

ரஜினியால் ஒரே பிரச்சனை… போயஸ் கார்டன் வீட்டு பெண் புகார்…

-

- Advertisement -
தமிழர் திருநாளான தைத்திருநாள், இன்று மாநிலம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில், மதுரை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியும் களைகட்டி வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதுமட்டுமன்றி அரசியல் தலைவர், சினிமா நட்சத்திரங்கள், என பலரும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பொங்கல் திருநாளான இன்று சென்னை போயஸ் கார்டன் பகுதியில் இருக்கக் கூடிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் கூடினர். இதையறிந்து, வீட்டில் இருந்து வௌியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். தொடர்ந்து ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளையும் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்கு இறைவனை வேண்டுகிறேன். வாழ்வில் ஒழுக்கம், சிந்தனையில் நேர்மை இருந்தால் வாழ்வும் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்கும் என அவர் தெரிவித்தார். இதனிடையே ரஜினியின் பக்கத்து வீட்டு பெண் ஒருவர், ரசிகர்கள் அதிகம் கூடுவதால் கடும் ஆத்திரம் அடைந்து குற்றம் சாட்டியுள்ளார். நாங்களும் வரி செலுத்தி பல ஆண்டுகளாக இந்த வீட்டில் குடியிருக்கிறோம். ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் இவ்வாறு வீட்டின் முன் கூடுவது பெரும் தொல்லையாக உள்ளதாக அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

MUST READ