- Advertisement -
தமிழர் திருநாளான தைத்திருநாள், இன்று மாநிலம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில், மதுரை மாவட்டம் மற்றும் சுற்றுவட்டாரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியும் களைகட்டி வருகிறது. அடுத்த 3 நாட்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதுமட்டுமன்றி அரசியல் தலைவர், சினிமா நட்சத்திரங்கள், என பலரும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பொங்கல் திருநாளான இன்று சென்னை போயஸ் கார்டன் பகுதியில் இருக்கக் கூடிய நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு நூற்றுக்கணக்கில் ரசிகர்கள் கூடினர். இதையறிந்து, வீட்டில் இருந்து வௌியே வந்த ரஜினிகாந்த், ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். தொடர்ந்து ரஜினிகாந்த் தனது பொங்கல் வாழ்த்துகளையும் ரசிகர்களுக்கு தெரிவித்தார்.
#Thalaivar Dharisanam today
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
Wishing you all #HappyPongal2024 ❤️#Rajinikanth | #SuperstarRajinikanth | #superstar @rajinikanth | #Vettaiyan | #Jailer | #LalSalaam | #Thalaivar171 | #Thalaivar173 | #Thalaivar172 | #Pongal | #PongalCelebration |… pic.twitter.com/QQOZVskKiv
— Suresh balaji (@surbalutwt) January 15, 2024