Homeசெய்திகள்சினிமாஎன் அப்பாவின் புகழ் எனக்கு சுமையாக இருக்கிறது..... கமல் குறித்து ஸ்ருதிஹாசன்!

என் அப்பாவின் புகழ் எனக்கு சுமையாக இருக்கிறது….. கமல் குறித்து ஸ்ருதிஹாசன்!

-

- Advertisement -

நடிகை ஸ்ருதிஹாசன் கமல் குறித்து பேசி உள்ளார்.

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் திரைத்துறையில் நடிகையாகவும் இசையமைப்பாளராகவும் பாடகியதாகவும் வலம் வருகிறார். என் அப்பாவின் புகழ் எனக்கு சுமையாக இருக்கிறது..... கமல் குறித்து ஸ்ருதிஹாசன்!இவர் தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் வேதாளம், புலி, பூஜை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடுத்தது இவர் தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதாவது ரஜினியின் மகளாக ப்ரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் நடிகை ஸ்ருதிஹாசன் தனது பெற்றோர் குறித்து பேசி உள்ளார். என் அப்பாவின் புகழ் எனக்கு சுமையாக இருக்கிறது..... கமல் குறித்து ஸ்ருதிஹாசன்!அதன்படி அவர் பேசியதாவது, “கமல்ஹாசன் மற்றும் சரிகாவின் மகளாக இருப்பது எனக்கு பெருமைதான் என்றாலும் அனைவருமே என்னை கமலின் மகன் என்று தான் சொல்கிறார்கள். என் அப்பாவின் புகழ் சில சமயங்களில் எனக்கு சுமையாக இருக்கிறது. இதன் காரணமாக எனக்கென தனி ஒரு அடையாளத்தை உருவாக்க முயற்சி செய்து வருகிறேன். என் அப்பாவும் அம்மாவும் பிரிந்த பிறகு அம்மாவுடன் நானும் மும்பைக்கு சென்று விட்டேன். அவர்கள் இருவரும் பிடிவாதமாக இப்படி பிரிந்து வாழ்வது என்னையும் என் தங்கை அக்ஷராவையும் பெரிதும் பாதித்துள்ளது” என்று தெரிவித்திருக்கிறார்.

MUST READ