சென்னை உதயம் தியேட்டரை விரைவில் மூட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையின் பிரபல தியேட்டர்களில் உதயம் தியேட்டரும் ஒன்று. இந்த தியேட்டர் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. கடந்த 1983 ஆம் ஆண்டு அசோக் பில்லர் அருகில் இந்த திரையரங்கம் கட்டப்பட்டது. சென்னையிலேயே மிகப்பெரிய தியேட்டர் என்ற பெயரை பெற்றது. ஆனால் அதன் பின் காலப்போக்கில் மல்டிபிளக்ஸ் தியேட்டர்களின் வருகையால் உதயம் தியேட்டரின் மவுசு குறைந்துவிட்டது. அதே சமயம் இந்த தியேட்டரின் அருகில் மிகப்பெரிய ஷாப்பிங் மால் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 40 வருட கட்டிடமான உதயம் தியேட்டரில் வியாபாரம் பெரிய அளவில் இல்லை என்பதால் இந்த தியேட்டர் விரைவில் மூடப்பட இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த தியேட்டரை இடிக்கவும் திட்டமிட்டுள்ளனர்.
ஏனெனில் உதயம் தியேட்டர் இருக்கும் பகுதியை காசாகிராண்ட் நிறுவனம் வாங்கி அங்கு 25 அடுக்குமாடி கட்டடம் ஒன்றை கட்ட முடிவு செய்துள்ளது. ஏற்கனவே சென்னையில் உள்ள ஹோட்டல்கள் போன்ற கட்டிடங்கள் வாங்கப்பட்டு மிகப்பெரிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உதயம் தியேட்டரும் வாங்கப்பட்டு இடிக்கப்பட உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.