spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதுஷாரா விஜயனை பார்த்து பொறாமைபட்ட தனுஷ்.... எதற்காக தெரியுமா?

துஷாரா விஜயனை பார்த்து பொறாமைபட்ட தனுஷ்…. எதற்காக தெரியுமா?

-

- Advertisement -

நடிகை துஷாரா விஜயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ஆவார். இவர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி, அருள்நிதி நடிப்பில் வெளியான கழுவேத்தி மூர்க்கன் உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். துஷாரா விஜயனை பார்த்து பொறாமைபட்ட தனுஷ்.... எதற்காக தெரியுமா?அடுத்தது இவர் தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் திரைப்படத்தில் தனுஷுக்கு தங்கையாக நடித்து பெயர் பெற்றார். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் வேட்டையன் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துஷாரா விஜயன். இந்த படம் வருகின்ற அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. அதற்காக முழு வீச்சில் தயாராகி வரும் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனுஷ் குறித்தும் சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்தும் பேசியுள்ளார். துஷாரா விஜயனை பார்த்து பொறாமைபட்ட தனுஷ்.... எதற்காக தெரியுமா?அவர் பேசியதாவது, “தனுஷுடன் ராயன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான் வேட்டையன் படத்தின் முதல் காட்சியில் நடித்தேன். அப்போது தனுஷ் சார் என்னிடம் வந்து, தலைவரை பார்த்தியா? தலைவர் கூட நடிச்சியா? என்று கேட்டார். ஆமாம் சார் என்று சொன்னேன். அதற்கு தனுஷ் சார், ‘என் வாழ்க்கையில் யாரை பார்த்தும் நான் பொறாமைப்பட்டது இல்லை. ஆனால் உன்னை பார்க்கும் போது பொறாமையாக இருக்கிறது’ என்று சொன்னார். தனுஷின் ரசிகை நான். தனுஷ் சாருடன் நடிப்பது போன்று நான் நினைத்துப் பார்த்திருக்கிறேன். ஆனால் ரஜினி சாருடன் நடிப்பது நான் நினைத்துப் பார்க்காத ஒன்று” என்று தெரிவித்துள்ளார் துஷாரா விஜயன்.

MUST READ