spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஒளிப்பதிவாளராக ஆசைப்படும் தனுஷின் மூத்த மகன்!

ஒளிப்பதிவாளராக ஆசைப்படும் தனுஷின் மூத்த மகன்!

-

- Advertisement -

தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அதே சமயம் இயக்குனராகவும், பாடகராகவும், தயாரிப்பாளராகவும், பாடல் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு ராயன் படத்தை இயக்கியுள்ளார் தனுஷ்.ஒளிப்பதிவாளராக ஆசைப்படும் தனுஷின் மூத்த மகன்! இதைத்தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தையும் இயக்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இவ்வாறு திரைத்துறையில் பிசியாக வலம் வரும் தனுஷ், தன்னுடைய மூத்த மகனை சினிமாவில் களமிறக்கியுள்ளார். அதாவது தனுஷின் மூத்த மகன் யாத்திராவிற்கு ஒளிப்பதிவாளராக வேண்டும் என்பதுதான் ஆசையாம். எனவே தனுஷ் தான் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படத்தில் யாத்ரா, ஒளிப்பதிவு துறையில் பணியாற்றி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒளிப்பதிவாளராக ஆசைப்படும் தனுஷின் மூத்த மகன்!

ஏற்கனவே யாத்ரா, ராயன் படத்தில் நடித்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஒளிப்பதிவாளராக களமிறங்கியுள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ராயன் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஒளிப்பதிவாளராக ஆசைப்படும் தனுஷின் மூத்த மகன்!கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை 2024 கோடை விடுமுறையில் வெளியிடப்பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். எனவே படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ