மணிரத்னம், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர் என்பது அனைவரும் அறிந்ததே. தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் இந்திய சினிமாவிற்கும் இவர் தலைசிறந்த படைப்பாளியாக திகழ்ந்து வருகிறார். 1983இல் வெளியான பல்லவி அனுபல்லவி படத்தின் மூலம் இயக்குனராக தடம் பதித்த மணிரத்னம், இன்று வரையிலும் பல தலைமுறைகளை தாண்டி கொண்டாடப்பட்டு வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கிய மௌன ராகம், நாயகன் போன்ற படங்கள் இன்றுவரையிலும் பலரின் ஃபேவரிட் இன்று வரையிலும் பலரின் ஃபேவரிட் படங்களாக இருந்து வருகிறது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்த நிலையிலும் இன்றைய இளைஞர்களுக்கும் டஃப் கொடுக்கும் இயக்குனராக வலம் வருகிறார் மணிரத்னம். தமிழ் சினிமாவின் முன்னோடி என்றால் அது மணிரத்னம் தான்.
அந்த அளவிற்கு இவருடைய படங்கள் பெரும்பாலும் காலத்தால் அழிக்க முடியாத படைப்புகளாகவே இருந்து வருகிறது. பம்பாய் படமாக இருக்கட்டும், தளபதி படமாக இருக்கட்டும், ரோஜா படமாக இருக்கட்டும், இவருடைய ஒவ்வொரு படங்களுமே மணிரத்னம் ஒரு தலைசிறந்த படைப்பாளி என்பதையும் இவர் தமிழ் சினிமாவின் பெருமை என்பதையும் விளக்கிக் இவர் தமிழ் சினிமாவின் பெருமை என்பதையும் ஆணித்தனமாக விளக்கியது.
அதே சமயம் 50 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் சிம்ம சொப்பனமாக இருந்த பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர் போன்ற பல நடிகர்கள் படமாக்க முயற்சித்து அது கைகூடாமல் போன நிலையிலும், அதனை தனது விடாமுயற்சியால் சாதித்து காட்டியவர் மணிரத்னம். இவர் அடுத்ததாக கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படத்தை உருவாக்கி வருகிறார். இந்நிலையில் மணிரத்னத்தின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தற்போது வரை இவருடைய சொத்து மதிப்பு 1200 கோடியாம். இந்த தகவல் ரசிகர்களை மட்டுமல்லாமல் கோலிவுட்டையே வாயை பிளக்க வைத்துள்ளது.