நடிகை நயன்தாரா இனி யாரும் தன்னை லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. அந்த வகையில் இவர் திரைத்துறையில் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதன்படி யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக், டியர் ஸ்டூடண்ட்ஸ், டெஸ்ட், மண்ணாங்கட்டி, ராக்காயி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு ஏராளமான ரசிகர்களை தன்னுடைய நடிப்பினால் தன் பக்கம் கவர்ந்து இழுத்த நயன்தாரா, அனைவராலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டார். அதன்படி அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலுமே லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழி டைட்டில் கார்டுகளிலும் இடம்பெற்றிருக்கும்.
இந்நிலையில் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இனி தன்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதன்படி அந்த அறிக்கையில், “இந்த அறிக்கை உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வைக்கும் என்று நம்புகிறேன். என் வாழ்க்கை ஒரு சிறந்த புத்தகமாக இருந்து வருகிறது. அது எப்போதும் உங்களின் அன்பும் பாசத்தாலும் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. என்னுடைய வெற்றியின் போதும், கஷ்டங்களின் போதும் என்னை தூக்கி நிறுத்த நீங்கள் எப்போதும் என்னுடன் இருந்திருக்கிறீர்கள். உங்களில் பலர் என்னை தேடி சூப்பர் ஸ்டார் என்று அன்புடன் குறிப்பிட்டுள்ளீர்கள். இது உங்களுடைய மகத்தான அன்பிலிருந்து பிறந்த பட்டம். இவ்வளவு மதிப்புமிக்க பட்டத்தால் எனக்கு முடிசூடியதற்கு உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன்.
இருந்த போதிலும் யாரும் என்னை நயன்தாரா என்று அழைக்க வேண்டாம் என பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் அந்த பெயர் என் இதயத்திற்கு மிக நெருக்கமானது என உணர்கிறேன். இதுபோன்ற பட்டங்களும் பாராட்டுகளும் விலைமதிப்பற்றவை. ஆனால் அது சில நேரங்களில் நம் படைப்புகள், ரசிகர்களிடம் நாம் பகிர்ந்து கொள்ளும் நிபந்தனையற்ற பிணைப்பிலிருந்து நம்மை பிரிக்கும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தக்கூடும். எதிர்காலம் நம் அனைவருக்கும் கணிக்க முடியாதது. ஆனால் உங்களுடைய மங்காத ஆதரவும் உங்களை மகிழ்விக்க நான் எடுக்கும் கடின உழைப்பும் நிலையாக இருக்கும் என்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
- Advertisement -