நடிகர் சிம்பு, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் கொரோனா குமார் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்தார். இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்க இருப்பதாக கொரோனா காலகட்டத்திலேயே
அறிவிப்பு வெளியானது. ஆனால் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ், சிம்பு ஆகிய இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது. இந்நிலையில் கொரோனா குமார் திரைப்படம் மீண்டும் தொடங்க இருக்கிறது. இந்த படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க கோகுல்தான் இயக்க இருக்கிறார். ஆனால் சிம்புவுக்கு பதிலாக விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்க உள்ளார். இது குறித்த அப்டேட்டுகள் சில தினங்களுக்கு முன்பாகவே சமூக வலைதளங்களில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளிவரவில்லை. இந்நிலையில்தான் இந்த படம் சம்பந்தமான புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது விஷ்ணு விஷால் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்பதை கிட்டத்தட்ட உறுதியான நிலையில் படத்தின் டைட்டில் மட்டும் மாற்றப்பட்டுள்ளதாம். அதன்படி இந்த படத்துக்கு வைப் குமார் (Vibe Kumar) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட இருப்பதாக சொல்லப்படுகிறது.
நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே கோகுல் இயக்கத்தில் வேறொரு புதிய படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.