நடிகர் சூர்யா கடைசியாக கங்குவா திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவரது நடிப்பில் ரெட்ரோ திரைப்படம் 2025 மே 1ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி கடந்த சில மாதங்களான நிலையிலும் இந்த படம் நீண்ட நாட்களாக தொடங்கப்படாமல் இருந்தது இந்த படம் கைவிடப்பட்டதா? என்பது போன்ற சந்தேகத்தை எழுப்பியது. ஆனால் சமீபத்தில் வாடிவாசல் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, சூர்யா, வெற்றிமாறன் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர்.
இது தொடர்பான புகைப்படம் ஒன்றை தாணு, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்‘ திறக்கிறது என்று ட்வீட் போட்டிருந்தார். இதன் மூலம் வாடிவாசல் படம் தொடர்பான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இந்நிலையில் வாடிவாசல் கதையில் இந்தி திணிப்பு தொடர்பான கதையும் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதாவது நடிகர் சூர்யா, சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால் இந்த படமானது இந்தி திணிப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுவதால் ஒரு சில அரசியல் காரணங்கள் கருதி நடிகர் சூர்யா இந்த படத்திலிருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது.
மேலும் இந்தி திணிப்பை மையமாகக் கொண்ட கதையில் நடிப்பதால் பாலிவுட்டில் சூர்யா அறிமுகமாவதில் சிக்கல் ஏற்படும் என்று ஒரு தரப்பில் கூறப்படுகிறது. சூழல் எப்படி இருக்க அதே இந்தி திணிப்பை பற்றி சொல்லும் வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் சூர்யா எப்படி ஒப்புக்கொண்டார்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. இருப்பினும் வாடிவாசல் திரைப்படம் காளைகள் தொடர்பான கதைக்களமா? அல்லது இந்தி திணிப்பை கொண்ட கதைக்களமா? என்பது குறித்த அப்டேட் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -