Homeசெய்திகள்சினிமாசென்னை வந்தடைந்தது பவதாரிணி உடல்... தி.நகர் இல்லத்தில் திரைப்பிரபலங்கள் அஞ்சலி....

சென்னை வந்தடைந்தது பவதாரிணி உடல்… தி.நகர் இல்லத்தில் திரைப்பிரபலங்கள் அஞ்சலி….

-

- Advertisement -
இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்ட பாடகி பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இசைஞானி இளையராஜவின் மகள் பவதாரிணி. அவருக்கு வயது 47 ஆகும். இவர், ராசய்யா படத்தில் இடம்பெற்ற மஸ்தானா மஸ்தானா என்ற பாடலை பாடி இருந்தார். இப்படத்தின் மூலம் அவர் பாடகியாகவும் அறிமுகம் ஆனார். தொடர்ந்து அவர் 30-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். மேலும், தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, கன்னட மொழி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். இவரது குரல் மிகவும் மென்மையாகவும், குழந்தை தனமாகவும் இருக்கும் என ரசிகர்கள் கூறுவது உண்டு.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதிக்கு ஆளாகினார். தொடர்ந்து இலங்கையில் உள்ள மருத்துவமனையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதனால், திரை உலகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இசை அமைப்பாளர்கள், நடிகர் நடிகைகள் மற்றும் அவரது நண்பர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது தந்தை இளையராஜா மற்றும் தம்பி யுவன்சங்கர் ராஜா ஆகியோர் பவதாரிணியின் உடலை பெற இலங்கை சென்றனர்.

இதையடுத்து, அவரது உடல் இலங்கையிலுலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப் பட்டது. இதைத் தொடர்ந்து பவதாரிணியின் உடல், தி நகரில் உள்ள இளையராஜா இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரைநட்சத்திரங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அஞ்சலிக்கு பிறகு பவதாரிணியின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

MUST READ