தனுஷ், கேப்டன் மில்லர் படத்திற்கு பிறகு தனது ஐம்பதாவது படமான ராயன் படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தனது 51 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை சேகர் கம்முலா இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் தனுஷ் உடன் இணைந்து நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சில தினங்களுக்கு முன்பாக படமானது பூஜை உடன் தொடங்கப்பட்டு இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருப்பதியில் நடைபெற்று முடிந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐதராபாத் பகுதியில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தனுஷ் – ராஷ்மிகா காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது நாகார்ஜுனா மற்றும் தனுஷ் காம்பினேஷன் காட்சிகள் படமாக்கப்படுகிறதாம்.
இதில் சுவாரஸ்ய தகவல் என்னவென்றால், நாகார்ஜுனா, தனுஷ் ஆகிய இருவருக்கும் இடையில் எமோஷனல் காட்சிகள் படமாக்கப்படுவதால், அதில் இருவரின் நடிப்பை பார்த்து வியந்து பலரும் அவர்களைப் பாராட்டி வருகின்றனராம். இதன் மூலம் D51 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. மேலும் இந்தப் படம் மும்பை தாராவியை மையமாக வைத்து உருவாகி வருவதால் தாராவி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
- Advertisement -


