கார்த்தியின் மார்ஷல் படத்தின் கதை குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
கார்த்தி நடிப்பில் கடைசியாக ‘மெய்யழகன்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து இவர், வா வாத்தியார், சர்தார் 2 ஆகிய படங்களையும் கைவசம் வைத்திருக்கிறார். அதில் வா வாத்தியார் திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. சர்தார் 2 திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இவர், மார்ஷல் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் தமிழ் இயக்கும் இந்த படம் கார்த்தியின் 29 வது படமாகும். இதனை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் வடிவேலு, ஆதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. கடல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என ஏற்கனவே தகவல் கசிந்தது. அதேசமயம் படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரத்தில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது இப்படம் கடற்கரை மக்கள் சார்ந்த வித்தியாசமான கதையில் கடந்த 1960 காலகட்டத்தில் நடைபெறும் கேங்ஸ்டர் படமாக தயாராகி வருகிறதாம். இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது.