spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசென்னையில் இருந்து மும்பை சென்ற ஜெயம் ரவி.... பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க திட்டம்!

சென்னையில் இருந்து மும்பை சென்ற ஜெயம் ரவி…. பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க திட்டம்!

-

- Advertisement -

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது நடிப்பில் தற்போது பிரதர் எனும் திரைப்படம் உருவாகி இருக்கும் நிலையில் இப்படம் வருகின்ற தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருக்கிறது. சென்னையில் இருந்து மும்பை சென்ற ஜெயம் ரவி.... பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க திட்டம்!அதே சமயம் இவர் காதலிக்க நேரமில்லை, ஜீனி போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனது உடைமைகளை மனைவி ஆர்த்தியிடம் இருந்து மீட்டுத் தர வேண்டும் என போலீசிலும் புகார் கொடுத்திருந்தார் ஜெயம் ரவி. அது மட்டும் இல்லாமல் தனது மகன்கள் ஆரவ் மற்றும் அயான் ஆகிய இருவரையும் மீட்க போராடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி சென்னையிலிருந்து தன்னுடைய அடிப்படை நகரத்தை மும்பைக்கு மாற்றியுள்ளார்.

அவர் மும்பையில் புதிய அலுவலகம் ஒன்றை அமைத்துள்ளதாகவும், பாலிவுட் தயாரிப்பு நிறுவனங்களுடன் தன்னுடைய புதிய படத்திற்கான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. இவர் மும்பை ஏர்போர்ட்டில் வந்திறங்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ