Homeசெய்திகள்சினிமாதிரைக்கு வரும் ஆகாஷ் முரளி... படப்பிடிப்பு நிறைவு...

திரைக்கு வரும் ஆகாஷ் முரளி… படப்பிடிப்பு நிறைவு…

-

- Advertisement -
விஷ்ணு வரதன் இயக்கத்தில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி அறிமுகமாகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர் விஷ்ணுவரதன். இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான குறும்பு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பின் அறிந்தும் அறியாமலும், பட்டியல், அஜித் நடிப்பில் வெளியான பில்லா ஆரம்பம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. கடைசியாக ஷெர்ஷா என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் இயக்குநராக அறிமுகமானார். அப்படம் தேசிய விருதையும் வென்றது.

இவர் தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதில் நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அவர் சினிமாவில் தடம் பதிக்கிறார். ஆகாஷ் முரளிக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடிக்கிறார். குஷ்பு, சரத்குமார், பிரபு ஆகியோர் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.  இந்த புதிய படத்தை மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கிறது. ரொமான்டிக் காதல் படமாக இத்திரைப்படம் உருவாகி வருகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பாகவே சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

MUST READ