Homeசெய்திகள்சினிமாஅயோத்தி சென்ற ரஜினி கூறிய கருத்தால் புதிய சர்ச்சை

அயோத்தி சென்ற ரஜினி கூறிய கருத்தால் புதிய சர்ச்சை

-

- Advertisement -
சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த இந்தியாவும் காத்திருந்த கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. அயோத்தியில் பல கோடி ரூபாய் செலவிட்டு ராமர் கோயில் கட்டப்பட்டது. பாபர் மசூதி அகற்றப்பட்டு அங்கு கோயில் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழாவுடன் தொடங்கியது. இதையடுத்து, பல கோடி செலவு செய்து கோயிலை கட்டிமுடித்து, அங்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் வசதிக்காக விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் திறக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியின் அறிவுறுத்தலின்படி, நாட்டில் உள்ள பிரபலங்கள், நட்சத்திரங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று அயோத்தில் ராமர் கோயில் குடமுழுக்கு கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. விழாவை முன்னிட்டி அயோத்தி ராமர் கோயில் பல விதமான விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு, வண்ணமயமாக காட்சி அளித்தது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், மக்களும் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்திருந்தனர். மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த லட்சக்கணக்கில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மேலும், அதற்கு ஏற்றபடி ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரஜினி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 500 ஆண்டுகால பிரச்சனை முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவித்தார். இது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய இயக்குநர் பா ரஞ்சித், ரஜினி சொன்ன கருத்துக்கு பின்னால் இருக்கும் அரசியலை நாம் கேள்வி கேட்க வேண்டும். அதுமட்டுமன்றி தொடர்ந்து திரவுபதி முர்மு புறக்கணிக்கப்படுவது மோசமானது என்றார்.

MUST READ