- Advertisement -
தான் இறந்து விட்டதாக போலியான செய்தி பரப்பியதற்காக, நடிகை பூனம் பாண்டே மீது வழக்கு தொடரப்பட்டு, மேலும், 100 கோடி ரூபாய் அபதாதம் கேட்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை பூனம் பாண்டே. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த அவர் மாடல் அழகியும் கூட. இவர் கடந்த 2011-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், நிர்வாணமாக மைதானத்தில் வலம் வருவேன் என தெரிவித்ததன் மூலம் பெரும் சர்ச்சைக்கு ஆளாகி பிரபலமும் அடைந்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சர்ச்சை கருத்தைகளும், செயல்களையும் செய்து வந்தார். பாலிவுட்டில் நஷா என்ற படத்தின் மூலம் இவர் நாயகியாக அறிமுகமானார்.
