நடிகர் சிம்பு, தக் லைஃப் படம் குறித்து பேசி உள்ளார்.
இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குனர்களின் ஒருவரான மணிரத்னம் தற்போது தக் லைஃப் எனும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ.ஆர். ரகுமான் இதற்கு இசையமைத்திருக்கிறார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் டிரைலர் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. மேலும் படத்தில் இடம்பெற்றுள்ள முத்த மழை பாடல் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. எனவே தக் லைஃப் திரைப்படம் நாளை (ஜூன் 5) திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிம்பு, தக் லைஃப் படம் குறித்து பேசி உள்ளார். அதன்படி, “தக் லைஃப் நாளைக்கு ரிலீஸ் ஆகிறது. ரொம்ப நம்பிக்கையாக இருக்கிறோம். சந்தோஷமாக இருக்கிறோம். இப்படம் வெற்றி அடைய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஏனென்றால் எல்லோரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். கமல் சார் ஆக்சன் காட்சிகளிலும் சரி, நடிப்பிலும் சரி பின்னி பெடலடித்திருக்கிறார். இந்த படத்தை பார்த்து நீங்கள் அனைவரும் என்ஜாய் பண்ணுவீங்க என்று நம்புகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.