spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதற்கொலை முயற்சிக்கான காரணத்தை சொன்ன பாடகி கல்பனா!

தற்கொலை முயற்சிக்கான காரணத்தை சொன்ன பாடகி கல்பனா!

-

- Advertisement -

பாடகி கல்பனா தனது தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கூறியுள்ளார்.தற்கொலை முயற்சிக்கான காரணத்தை சொன்ன பாடகி கல்பனா!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி கல்பனா. இவர் கடந்த சில வருடங்களாக ஐதராபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த நிலையில் சமீபத்தில் இவர் தனது வீட்டில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அதாவது இரண்டு நாட்களாக அவருடைய வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருப்பதை கண்ட காவலாளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க அவர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது கல்பனா அவருடைய பெட்ரூமில் சுயநினைவின்றி இருந்துள்ளார். தற்கொலை முயற்சிக்கான காரணத்தை சொன்ன பாடகி கல்பனா!அதைத் தொடர்ந்து அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்துவர்கள் பாடகி கல்பனா தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் என கூறியுள்ளனர். அதே நேரத்தில் போலீசார் கல்பனாவின் கணவரையும் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கல்பனாவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பதையும் விசாரித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கல்பனாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட அவரிடம் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை கேட்டுள்ளனர். தற்கொலை முயற்சிக்கான காரணத்தை சொன்ன பாடகி கல்பனா!அப்போது கல்பனா கூறியதாவது, கேரளாவில் இருக்கும் தனது மூத்த மகள் படிப்பிற்காக ஐதராபாத்திற்கு வரவேண்டும் என கேட்டதாகவும் அதற்கு தன்னுடைய மகள் மறுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். எனவே இதன் காரணமாக மனமடைந்து போனதால் தூக்கம் வராததால் அதிகமான  தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகவும் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை எனவும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார் கல்பனா.

MUST READ